india

img

பிப்.16 இல் வேலைநிறுத்தம்

மூன்றாவது ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பிப்.16 ஆம் தேதியன்று பிஎஸ்என்எல் ஊழி யர்கள் வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட உள்ளதாக சேலத்தில் நடைபெற்ற மாநில கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்,  ஓய்வூதியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மாநில அளவிலான கருத்த ரங்கம் சேலம் புதிய பேருந்து நிலை யம் அருகே உள்ள தனியார் விடுதி யில் சனியன்று ஆர்.ராஜசேகர் தலை மையில் நடைபெற்றது. பி.ராஜி வர வேற்றார். பிஎஸ் என்எல் ஊழியர் சங்க துணைப் பொதுச் செயலாளர் எஸ்.செல் லப்பா அறிமுக உரையாற்றினார். பொதுச்செயலாளர் பி.அபிமன்யு சிறப்புரையாற்றினார். இக்கருத்த ரங்கில், பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய பேச்சுவார்த்தை யை முடிவு செய்ய வேண்டும். ஓய்வூ தியர்களுக்கு ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு வசதிகளான இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட வசதிகளை நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.16 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்ற உள்ளது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒப்பந்த தொழி லாளர் சங்க துணைத்தலைவர் எஸ்.மோகன் தாஸ், மாநிலச் செயலா ளர் சையத் இத்ரீஸ், ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் இ.கோபால், ஓய்வூதியர் சங்க செயலாளர் எஸ். தமிழ்மணி, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.செல்வம் உட்பட 500க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் தேர்வு
ஒப்பந்த தொழிலாளர் சங்க அகில இந்திய உதவி பொது செயலா ளர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் அனிமேஷ் மித்ரா உள்ளிட்ட தலைவர்கள் உரை யாற்றினர். 

மாநாட்டில், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவராக சி.பழனிச்சாமி (நாகர்கோவில்), மாநி லச் செயலாளராக எம்.சையத் இத்ரீஸ் (ஈரோடு), மாநிலப் பொருளாளராக சி.பாஸ்கர் (சேலம்) உள்ளிட் டோர் தேர்வு செய்யப்பட்டனர்.