நீட் தேர்வுக்கு எதிராக “இந்தியா” கூட்டணிக் கட்சிகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணி யில் அங்கம் வகிக்கும் மதச்சார் பற்ற ஜனதா தள கட்சியும் நீட் தேர்வுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி யுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா மாநி லங்களவையில்,”நீட் தேர்வு குளறுபடியால் லட்சக்கணக் கான மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். அதனால் விசார ணை நடத்த வேண்டும்” என பேசி னார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணி யில் அங்கம் வகிப்பது மட்டுமல்லா மல், அக்கட்சியின் மூத்த தலை வர் குமாரசாமி ஒன்றிய அமைச்சரா கவும் இருக்கிறார். இத்தகைய சூழலில் நீட் தேர்வுக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி போர்க்கொடி தூக்கி இருப்பது பாஜகவிற்கு கலக்கத்தை ஏற் படுத்தியுள்ளது.