புதுதில்லி, ஜூலை 18- திரிபுரா மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடை பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஆளும் பாஜக வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது:
பாதல் ஷில் படுகொலை; பலர் படுகாயம்!
2024 ஆகஸ்ட் 8 அன்று திரிபுரா மாநிலத்தில் மூன்று அடுக்கு பஞ்சா யத்துத் தேர்தல்கள் நடைபெறவிருக் கின்றன. இவ்வாறு உள்ளாட்சி அமைப்பு களுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட திலிருந்தே ஆளும் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேட்பா ளர்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டி ருப்பவர்களுக்கு எதிராகவும் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களும், அவர்களுடைய ஆதரவாளர்களும் பல இடங் களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியாதவாறு வலுக்கட்டாயமாகத் தடுக்கப்பட்டுள்ளனர். ஜூலை 13 அன்று தெற்கு திரிபுரா ஜில்லா பரிஷத்துக்காக போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாதல் ஷில் பாஜக குண்டர்களால் கொல்லப் பட்டிருக்கிறார். எண்ணற்ற தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் தாக்கப்பட்டு, காய ங்கள் அடைந்து, சிகிச்சைக்காக மருத்து வமனைகளில் சேர்க்கப்பட்டி ருக்கிறார்கள்.
வேட்புமனு கூட தாக்கல் செய்ய முடியாத நிலை!
பல இடங்களில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டங் களில் கலந்துகொள்வதற்காக சென்ற எண்ணற்ற தலைவர்கள் அக்கூட்டங் களில் கலந்துகொள்ள முடியாதவாறு தடுக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சி யைச் சேர்ந்த எவரேனும் வேட்புமனு தாக்கல் செய்தால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்று பாஜக-வினரால் அச்சுறுத்தப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏறிச் செல்லும் வாகனங்கள் காவல்துறையினரின் முன் னிலையிலேயே தாக்கப்படுகின்றன. பல இடங்களில் கட்சியின் பிரபலமான தலைவர்கள் தடுத்துநிறுத்தப்பட்டு தாக்கப்பட்டிருக்கின்றனர். பல இடங் களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் நடத்தும் பேரணிகள் மீது கற் களை வீசி இருக்கின்றனர். மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களின் இருப்பிடங்கள் மீது வெடிகுண்டுகளை வீசி இருக்கின்ற னர்.
2018 முதல் சிபிஎம் ஊழியர்கள் 30 பேர் படுகொலை!
திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்தே, அது மாநி லத்தில் எதிர்க்கட்சியினரை ஒழித்துக் கட்டும் நிகழ்ச்சி நிரலை பாஜக ஒரே குறி யாகப் பின்பற்றி வருகிறது. 2018-இ லிருந்து இதுவரை இவர்களின் கொலை பாதகத் தாக்குதலின் விளைவாக கட்சி யின் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் 30 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இவர்களின் இத்தகைய அச்சுறுத்தும் உத்திகள், தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தப்படுவதன் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு பயங்கரவாதச் சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்றும், தேர்தல்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறவும் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும் அரசியல் தலைமைக் குழு கோருகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கோரியுள்ளது. (ந.நி.)