india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சண்டிகர்
பாஜக எம்.பி
பிரிஜேந்திர சிங்  காங்கிரசில் இணைந்தார் 

ஹரியானா மாநிலம் ஹிஸார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். பாஜகவில் இருந்து விலகுவதாக பிரிஜேந்திர சிங் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்நிலையில் எம்.பி பிரிஜேந்திர சிங்,  தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பிரிஜேந்திர சிங், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  சார்பில் ஹிஸார் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கூறப்படுகிறது. 

புதுதில்லி
ஜி பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு 
பணம் கொடுப்பதை தடுக்க சிறப்பு குழுக்கள்  

நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு நேரடி யாக பணம் கொடுப்பதை தவிர ஜிபே,  போன்பே மூலமாகவும் பணம் கொடுக்கப் படலாம் என்று கருதப்படுகிறது. இதை யடுத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை களை கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். குறிப்பாக டிஜிட்டல் மூலம் மிகப்பெரிய அளவில்  பணப்பரிமாற்றம் நடந்தால் அதுபற்றி விரி வாக விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தீர்மானித்துள் ளனர். இதற்காக அவர்கள் தனித்தனி குழுக் களையும் உருவாக்கி இருக்கிறார்கள். டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை கண்கா ணிக்க சுழற்சி முறையில் ஊழியர்கள் பணி யாற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை யும் வருமான வரித்துறை அமைத்துள் ளது. அதுபோல மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுப்ப தற்கு ஜிஎஸ்டி துறை சார்பில் தனித்தனி குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

புதுதில்லி
ஆழ்துளைக் கிணற்றில்  விழுந்தவர் சடலமாக மீட்பு 

புதுதில்லியில் விகாஸ்புரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கேசாபூர் மண்ட என்ற பகுதியில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான ஒரு ஆழ்துளைக் கிணறு ஒன்று உள்ளது. 

இந்தக் குழியில் குழந்தை ஒன்று தவறி விழுந்ததாக செய்திகள் வெளி யானது. தகவலறிந்த தீயணைப்பு படை யினர் மற்றும் மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நபர் ஞாயிறன்று பிற்பகல் 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். அப்பொழுது குழியில் விழுந்தது குழந்தை இல்லை, 30 வயது மதிப்புடைய நபர் என்று தெரிய வந்துள்ளது. அந்த நபர் எப்படி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார் என்றும், இறந்த நபரை அடையாளம் காணும் முயற்சிகளும் நடந்து வருவ தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பெங்களூரூ
அரசியல் சாசனத்தை திருத்துவோம் : பாஜக எம்.பி. ஆணவம்

பாஜகவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்ததும் அரசியல் சாசனம் திருத்தப்படும் கர்நாடக பாஜக எம்பியும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான அனந்த் குமார் ஹெக்டே  ஆவண மாகப் பேசியுள்ளார்.  கடந்த ஜனவரி  மாதம் கர்நாடகாவில் இந்து கோயில் களின் மீது கட்டப்பட்டுள்ள மசூதி களை இடிக்க வேண்டும் என்று அனந்த  குமார் ஹெக்டே அழைப்பு விடுத்திருந் தார். மகாத்மா காந்தி தலைமையிலான விடுதலை இயக்கம் ஒரு நாடகம் என்று கடந்த 2020-ம் ஆண்டு தெரிவித்திருந் தார். பாபா சாகேப் அம்பேத்கரின் அரசி யலமைப்பின் கீழ் பாஜக தலைவர்களால் வாழ முடியவில்லையா? என எக்ஸ் பக்கத்தில் ஆளும்  காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.