தில்லி சட்டமன்றத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் திங்களன்று காலை தொடங்கியது. அவை துவங்கிய வுடன் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் தில்லி குடிநீர் வாரிய முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி சபாநாயகர் இருக் கைக்கு முன்பு கூச்சலிட்டனர். அவையை நடத்தவிட்டால் மட் டுமே இதை பற்றி விவாதிக்க முடி யும் என சபாநாயகர் கூறினார். ஆனால் பாஜக எம்எல்ஏக்கள் 7 பேரும் தொடர்ந்து கூச்சலிட்ட னர்.
இந்நிலையில், அவை நட வடிக்கைகளுக்கு பாஜக எம்எல் ஏக்கள் இடையூறு செய்ததாக ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் புகார் அளித்த னர். இதையடுத்து, சபாநாயகர் ராம்விலாஸ் கோயல் பாஜகவின் 7 எம்எல்ஏக்களையும் வெளி யேற்ற அவை காவலர்களிடம் உத்தரவிட்டார்.