18ஆவது மக்களவை தேர்தலில் பெரும்பான்மையை இழந்த பாஜக, கூட்டணிக் கட்சிகளின் தயவோடு மீண்டும் ஆட்சியில் அமர்ந் துள்ளது. பிரதமராக மோடி 3ஆவது முறையாக பொறுப்பேற்றுள்ளார். 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜூன் 24 அன்று தொடங்குகிறது.
இந்த கூட்டத்தொடரில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்வு உள் ளிட்ட நிகழ்வுகள் அரங்கேற உள்ள நிலையில், இதனை முன்னின்று நடத்த தற்காலிக சபாநாயகர் தேர்வு மிக முக்கியமானதாகும்.
இந்நிலையில், தற்காலிக சபாநாய கராக 7 முறை எம்.பி.யான ஒடிசாவின் பாஜக எம்பியான பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்படுவதாக ஜனாதி பதி திரவுபதி முர்மு வியாழனன்று அறிவிப்பாணை வெளியிட்டார். தற்கா லிக சபாநாயகர் தேர்வு சீனியர் முறைப் படி நடைபெறுவது வழக்கமான நிலையில், பர்த்ருஹரி மஹ்தாப் நிய மனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. காரணம் பர்த்ருஹரி மஹ்தாப் 7 முறைதான் எம்பியானவர். ஆனால் அவரை விட 8 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட சீனிய ரான காங்கிரஸ் கட்சியின் கேரள எம்பி யான கொடிக்குன்னில் சுரேஷுக்கு தற்காலிக சபாநாயகர் பொறுப்பு வழங்கப்படாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“தலித் என்பதாலேயே”
தற்காலிக சபாநாயகர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலா ளர் கே.சி.வேணுகோபால் கூறு கையில்,”காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான 8 முறை எம்.பி.யான கொடிக்குன்னில் சுரேஷுக்குதான் முறைப்படி தற்காலிக சபாநாயகர் வாய்ப்பு தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு ஏன் இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது? கொடிக் குன்னில் சுரேஷ் “தலித்” என்பதால் மத்தியில் ஆளும் பாஜக அரசு வாய்ப்பு தர மறுத்துள்ளதா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் கூறுகையில்,”பாஜக நாடாளு மன்ற ஜனநாயக மரபுகளை தொடர்ந்து மீறி வருகிறது. எதிர்க்கட்சிகளை பாஜக திட்டமிட்டு அவமதிக்கிறது” என கண்ட னம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.