புதுதில்லி, ஜன.9- கர்ப்பிணி பில்கிஸ் பானு கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட வழக் கில் ஆயுள் சிறைத்தண்டனை பெற்ற 11 பேரை விடுவித்த குஜராத் அர சாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கை களை உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2002-இல் நடைபெற்ற இந்த குஜ ராத் வகுப்புவாத வன்முறைகளின் போது, கர்ப்பிணி பில்கிஸ் பானு, அவ ரது குடும்பத்தினர் மற்றும் பலர் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். அத்துடன், 14 பேர் படுகொலையும் செய் யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்ற வாளிகளுக்கு விடுதலை வழங்கிய குஜ ராத் அரசின் சட்டவிரோத நடவடிக்கை களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட வர்கள் அனைவரும் இரண்டு வார காலத்திற்குள் மீண்டும் சிறைச்சாலைக் குச் சென்று சரணடைய வேண்டும் என் றும் கூறியிருக்கிறது. இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் குழு வரவேற்கிறது. தீர்ப்பினை வழங்கியுள்ள உச்சநீதி மன்ற அமர்வானது, இவ்வாறு தண் டனை அனுபவித்து வந்தவர்களின் சிறைக் காலத்தைக் குறைத்து அவர் களை விடுதலை செய்வதற்கான ‘அதி காரம்’ (‘competence’) குஜராத் அர சாங்கத்திற்குக் கிடையாது என்றும், மாறாக, இந்த (குஜராத்) அரசாங்கம் தண்டிக்கப்பட்டவர்களுக்கு ‘உடந்தை யாக’ செயல்பட்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறது. இவ்வாறு தண்டனை அனுபவித்து வந்தவர்களை விடுதலை செய்ததை நியாயப்படுத்துவதற்காக, குற்றச் சம்பவங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கையில் (குஜராத் அரசாங்கம்) மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் உச்சநீதிமன்ற அமர்வு கூறியிருக்கி றது.
இவ்வாறு தண்டனை பெற்றவர் களின் தண்டனைக் காலத்தைக் குறைப்பதால் சமூகத்தில் உள்ள அமைதி குலைந்துபோகும் என்றும் தீர்ப்புரை யில் கடுமையாகச் சாடியுள்ளது. ஒன்றிய அரசாங்கத்தின் ஒப்புத லின் அடிப்படையில்தான் குஜராத் அர சாங்கம் இந்த முடிவினை எடுத்தி ருப்பதாக குஜராத் அரசாங்கம் கூறி யிருப்பதிலிருந்து, இவ்வாறு தண் டனை பெற்றவர்களை விடுவிப்பதற்கு ஒன்றிய அரசாங்கமும், குஜராத் அர சாங்கத்திற்கு இணையாக உடந்தை யாக இருந்திருக்கிறது.
நடைபெற்ற கொடூரமான குற்றங்க ளின் தன்மைகளோ மற்றும் அது சமூ கத்திலும், சட்டத்தின் ஆட்சியிலும் விளைவித்திட்ட பெரிய அளவிலான விளைவுகளையோ கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் தண்டனை பெற்றி ருந்தவர்களின் தண்டனைக்காலம் குறைக்கப்பட்டு, அவர்கள் விடு விக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவான ஒன்றாகும். அரசாங்கங்களும், அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கிவரும் அமைப்பு களும் தங்கள் அதிகார வரம்பெல் லைகளையும், சட்டத்தையும் மீறி செயல்படுமேயானால், அது தற்போ துள்ள ஜனநாயகத்திற்கு அழிவை ஏற்படுத்திடும். இவ்வாறு அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் கூறியுள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மும் வரவேற்றுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், நாட்டிலுள்ள சட்டத் தின்படி, மகாராஷ்டிர மாநிலத்தில் விசா ரிக்கப்பட்ட ஒரு வழக்கில் தண்டனை பெற்றவர்களின் தண்டனையை ரத்து செய்வதற்கு, குஜராத் மாநில அர சாங்கத்திற்குஅதிகாரம் இல்லை என்று தீர்ப்பு சுட்டிக் காட்டியிருக்கிறது என்று மாதர் சங்கம் கூறியிருக்கி றது.
(ந.நி.)