india

img

இதிலும் பாகுபாடு தங்கம் வென்ற அவனி லெகராவுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவிக்காத பிரதமர் மோடி

புதுதில்லி கடந்த மாதம் பிரான்ஸ் தலை நகர் பாரீஸில் நடைபெற்ற பொ துப்பிரிவு ஒலிம்பிக் தொடரில்  இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் 71ஆவது இடத்தி ற்கு பின்னோக்கி தள்ளப்பட்டது. 6 பதக் கங்கள் வென்ற வீரர் - வீராங்கனைக ளிடம் (குறிப்பிட்ட நபர்களிடம் மட்டும்) பிரதமர் மோடி ஒலிம்பிக் களத்திலேயே அவர்களுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். துப்பாக்கிச் சுடுதலில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற மனு பாக்கரி டம் பிரதமர் மோடி போன் பேசிய விவகா ரம் திரைப்பட ஷூட்டிங் ஸ்டைலில் எடுக்கப்பட்ட வீடியோ போன்று சமூக வலைத்தளங்களிலும், பாஜக ஆதரவு பெற்ற “கோடி மீடியா” ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளை போன்று வெளிவந்தது.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்ற அவனி லெகராவுக்கு பிரதமர் மோடி போன் செய்து வாழ்த்து சொல்ல வில்லை. பெயரளவில் டுவிட்டர் எக்ஸ்  பக்கத்தில் மோடி வாழ்த்து தெரிவித் துள்ள நிலையில், இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ் பொதுப் பிரிவு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லாத ஏக்கத்தை பாரா ஒலிம்பிக் மூலம் அவனி லெகரா நிவர்த்தி செய்துள்ளார். அதற்கான மரி யாதையை அளிக்காமல் பிரதமர் மோடி  பாகுபாடுடன் செயல்பட்டுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது. 

வழியனுப்பும் விழாவிலேயே பாகுபாடு...

பொதுப்பிரிவு ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்காக பாரீஸ் செல்ல தயா ரான வீரர் - வீராங்கனைகளை அழைத்து  அவர்களுக்கு அறிவுரை சொல்வது போல பிரதமர் மோடி ஷூட்டிங் நடத்தி னார். இதே போன்று பாரா ஒலிம்பிக்  தொடரில் பங்கேற்க பாரீஸ் செல்ல விருந்த வீரர் - வீராங்கனைகளுக்கு வாழ்த்து மற்றும் அறிவுரை கூற பிரதமர் மோடி நேரில் வரவில்லை. ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மட்டுமே வருகை தந்து வழியனுப்பி வைத்தார். 

பாஜக மதத்திலும் (இந்து - முஸ்லிம்), மாட்டிலும் (பசு - எருமை) பாகு பாடு காட்டுவது அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக உள்ளது போல, பொ துப்பிரிவு - மாற்றுத்திறனாளி வீரர், வீரா ங்கனைகளுக்கு வழியனுப்பி வைப்பதி லும், வாழ்த்துச் சொல்வதிலும் இடையே பாகுபாட்டை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.