“பென் பின்டர்” சர்வதேச விருது இங்கி லாந்து, அயர்லாந்து குடியரசு அல்லது காமன்வெல்த் நாடுகளில் வசிக்கும் சிறந்த இலக்கி யத் தகுதி கொண்ட எழுத்தாளருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிலையில், நடப்பாண்டு “பென் பின்டர்” விருதுக்கு இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் தேர்வு செய்யப்பட் டுள்ளார்.
ரயில்களில் பொதுமக்கள் ஆடு, மாடுகளைப் போல் நடத்தப்படுகிறார்கள். இது வெட்கக் கேடா னது என கடந்தாண்டு மும்பை புறநகர் ரயிலில் பயணித்த 2,590 பயணிகள் உயிரிழந்தது தொடர் பான பொதுநல வழக்கில் மும்பை உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய் யப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சிஐடி போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
நீட் தேர்வு ஓஎம்ஆர் விடைத்தாளை இணைய தளத்தில் பதிவேற்றியது தொடர்பாகவும், விடைத்தாளில் குளறுபடி இருந்தால் முறையீடு செய்வதற்கு காலக்கெடு உள்ளதா? என்பது குறித்தும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசு முறைப் பயணமாக ஜூலை 8 அன்று பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார். பிரதம ராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக மோடி ரஷ்யா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்தியா இந்து நாடு அல்ல என அமர்த்தியா சென் கூறியது உண்மையான கூற்று ஆகும். இந்தியா இந்து நாடல்ல; பன்முகத்தன்மை கொண்ட நாடு; பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு” என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி னார்.
கர்நாடகாவில் 10 ஆண்டுகளாக பெண் தேடி யும் கிடைக்கவில்லை என்றும்,சீக்கிரம் ஒரு பெண்ணை கண்டுபிடித்து தருமாறும் கொப்பல் மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர் ஒருவர் மனு அளித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தில்லியில் குடிநீர் பிரச்சனைக்காக உண்ணா விரதப் போராட்டம் நடத்தி உடல்நலம் பாதிக்கப் பட்ட ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மருத்துவமனை யிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பானி பூரிக்குப் பயன்படுத்தப்படும் சாஸ், மீட்டா காரா பவுடர் என ஐந்து வகையான பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறு கள் இருப்பது கர்நாடகாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை
மகாராஷ்டிராவில் மனுஸ்மிருதிக்கு இடமில்லை
அஜித் பவாரின் பேச்சால் பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா (ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் (அஜித்) ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில பாடத் திட்டத்தில் மனுஸ்மிருதியை சேர்க்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன.
இதையடுத்து, எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்),”மகாராஷ்டிராவில் மனுஸ்மிருதிக்கு இடமில்லை. மகாராஷ்டிரா அம்பேத்கர், ஜோதிபாபூலே, சாவித்திரி பாய் பூலே போன்றோர் பிறந்த பூமி . இவர்களின் முற்போக்கு சிந்தனைகளை செயல்படுத்துவதில் பெயர் பெற்ற மாநிலம் மகாராஷ்டிரா. மனுஸ்மிருதி வசனங்களை பள்ளிப்பாடங்களில் சேர்க்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர் கூறியுள்ளார். அதனால் மனுஸ்மிருதியை பாடத்திட்டத் தில் சேர்க்க எந்த முயற்சியும் செய்ய முடியாது. கார ணம் மனுஸ்மிருதியை மாநில அரசு ஆதரிக்க வில்லை” எனக் கூறினார்.
ஆர்எஸ்எஸ் - பாஜகவின் கொள்கையாக மனுஸ் மிருதி உள்ள நிலையில், “மகாராஷ்டிராவில் மனுஸ்மி ருதிக்கு இடமில்லை” என்று கூறிய அஜித் பவாரின் பேச்சால் பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பாட்னா
நீட் முறைகேடு பீகாரில் மேலும் 2 பேர் கைது
நடப்பாண்டு நீட் தேர்வில் பெரி யளவு முறைகேடு சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வரு கிறது. சிபிஐ விசாரிப்பதற்கு முன்பே பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில், வினாத்தாள் விற்பனை கும் பல் தலைவரான ரவி அட்ரியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, வியாழனன்று நீட் முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நீட் தேர்வு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபின் முதல் முறையாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுதில்லி
பாஜக எழுதிக் கொடுத்த திரைக்கதையே குடியரசுத் தலைவர் உரை
ஆம் ஆத்மி கண்டனம்
குடியரசுத் தலைவரின் உரை என் பது ஒன்றிய அரசு எழுதிக் கொடுத்ததுதான் என்பதால் அவரின் உரையை புறக்கணிப்பதாக ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் வியாழனன்று காலை அறிவித்தார். தொடர்ந்து நாடா ளுமன்ற வளாகத்தில் பதாகைகளுடன் ஆம் ஆத்மி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆம் ஆத்மி மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பி யுமான சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மோடி ஆட்சியில் நாடு முழுவதும் அரசியல் சட்டமும், ஜனநாயக மும் சுக்குநூறாக நொறுக்கப்படுகிறது. அரசு எழுதிக் கொடுத்து குடியரசுத் தலைவர் ஆற்றும் உரையில் ஜனநாய கம், அரசியல் சட்டம் பற்றி பெரிதாக பேசு வார்கள். ஆனால்உண்மையில் நாட்டில் ஜனநாயகமும், அரசியல் சட்டமும் சிதைக்கப்படுகிறது. உச்சநீதி மன்றத்தால் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட இருந்த நிலை யில், சிபிஐயால் அவர் கைது செய்யப் பட்டுள்ளார். மோடியின் சர்வாதிகார ஆட்சி, விசாரணை அமைப்புகளை தவ றாக பயன்படுத்துவதற்கு பெரிய எடுத் துக்காட்டு கெஜ்ரிவால் கைது. கெஜ்ரி வாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராய்பூர்
பசுவின் பெயரால் 3 பேர் படுகொலை:
பாஜக இளைஞரணி தலைவர் கைது
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநி லத்தின் அரங்க் பகுதியில் கடந்த ஜூன் 7 அன்று பசுக் களை கடத்தியதாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குட்டு கான், சந்த் மியா கான், சதாம் குரேஷி ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அரங்கேறி இரண்டு வாரங்கள் ஆன நிலையிலும் போலீசார் குற்ற வாளிகளை கைது செய்யாததால், கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் மூலம் நெருக்கடி அளித்த னர். இதனால் இந்த வழக்கை விசா ரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக் கப்பட்ட நிலையில், 20 நாட்களுக்கு பிறகு சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் மாவட்ட பாஜக இளைஞரணி (யுவ மோர்ச்சா) தலைவர் ராஜா அகர்வால், ஹர்ஷா மிஸ்ரா, நவீன் சிங் தாக்கூர் மற்றும் மயங்க் சர்மா என 4 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது. பசு வின் பெயரால் 3 பேர் கொலை வழக் கில் பாஜக இளைஞரணி தலைவர் உட் பட 4 பேர் கைது செய்யப்பட்டதற்கு பஜ்ரங் தள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையை தூண்டியுள்ளது.
புதுதில்லி
நாடாளுமன்றத்தில் செங்கோலை அகற்றி அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்
சமாஜ்வாதி கட்சி கோரிக்கை
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோலை, சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைத்து பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். இன்னமும் சபா நாயகர் இருக்கைக்கு அருகே செங்கோல் உள்ள நிலையில், “நாடா ளுமன்றத்தில் செங்கோலை அகற்றி அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்” என சமாஜ்வாதி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஆர்.கே.சவுத்ரி கூறுகையில், “அர சியலமைப்பு சாசனம் என்பது ஜன நாயகத்தின் சின்னம். ஆனால் மோடி அரசு நாடாளுமன்றத்தில் செங் கோலை நிறுவியது. செங்கோல் காலம் (சமஸ்தான காலம்) முடி வுக்கு கொண்டு வந்த பிறகு, நாடு சுதந்திரம் பெற்றது. செங்கோல் அல்லது அரசியலமைப்பு சாசனம் இவற்றில் எதனால் நாடு வழி நடத்தப்படும்? என்ற கேள்வி எழு கிறது. அதனால் அரசியலமைப்பு சாசனத்தை காப்பாற்ற நாடாளு மன்றத்தில் இருந்து செங்கோலை அகற்றி அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்” என அவர் கூறினார்.