india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்க மலப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த பட்டாசு  ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தி னருக்கு இரங்கல் தெரிவித்தும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் குண மடைய பிரார்த்திப்பதாகவும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டுவிட்டர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர் பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ள தில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு தொடர்பாக வெள்ளியன்று உத்தரவிடுகிறது உச்சநீதிமன்றம்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பாஜக கூட்டணி ஆளும் பீகாரில் பெற்றோர், தேர்வு எழுதிய மாணவர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே ராஜஸ்தானில் 4 பேர், தில்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி ஆட்சியின் கடைசி 3 ஆண்டு களில் நாட்டு மக்களின் கடன் சுமை 14 லட்சம்  கோடியாக உயர்ந்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

மதுபான கொள்கை வழக்குத் தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது  அமலாக்கத்துறை வெள்ளியன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளது. 

வாக்குப்பதிவுக்கு முன்னதாக பல்வேறு நலத் திட்டங்களின் பயனாளிகளுக்கு ரூ.14,000 கோடி வழங்குவதை நிறுத்துமாறு ஆந்தி ரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே கன மழையின்போது சுவர் இடிந்து  விழுந்து 9 தொழிலாளர்கள் உயிரிழந்த விவ காரம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு நீர் மேலா ண்மை மற்றும் வெள்ள தணிப்பு பணிக்கு உலக வங்கி ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் கரிக்காபாடு சோதனைச் சாவடியில், குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரி யில் அமைக்கப்பட்டிருந்த ஒரு ரகசிய அறையில் பதுக்கி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்னோ அணி தோல்வி அடைந்ததற்கு பொது இடத்தில் வைத்து அணியின் உரிமை யாளர் திட்டியதால், லக்னோ அணியின் கேப்டன்  பொறுப்பிலிருந்து கே.எல்.ராகுல் விலகவுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுதில்லி
மோடி ஆட்சியில் குடும்ப சேமிப்பு கடுமையாகச் சரிவு

சேமிப்பு என்பது இந்தியக் குடும் பங்களில் தொன்று தொட்ட பழக்கமாகவே இருக்கிறது. அவசர செலவு, அத்தியாவசியச் செலவு,  எதிர்பாராச் செலவு என அனைத்துக்கும் உடனடியாக உதவுவது குடும்பங்களின் சேமிப்புகள்தான்.

இந்நிலையில், மோடி பிரதமர் ஆன  2014 ஆண்டுக்குப் பிறகு நாட்டு மக்க ளின் குடும்ப சேமிப்பு மிக மோசமான அள வில் குறைந்துள்ளதாக தேசியக் கணக் குப் புள்ளி விவரம் அறிக்கையுடன் தக வல் தெரிவித்துள்ளது. கடந்த 2022 நிதி யாண்டில் ரூ.17.1 லட்சம் கோடியாக இருந்த குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு,  2023 நிதியாண்டில் ரூ.14.2 லட்சம் கோடி யாக சரிந்துள்ளது. தீவிர பணவீக்கத்தால்  2014 பிறகு குடும்ப சேமிப்பு மிக மோச மான அளவில் குறைந்துள்ளதாக நிபு ணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 2023இல் இந்தியக் குடும்பத்தின் சராசரி சேமிப்பு 5.1% ஆக  குறைந்து விட்டதாக வங்கி அறிக்கைகள் ஏற்கெனவே தகவல் வெளியிட்டன என் பது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத்
பாஜகவின் கள்ள ஓட்டால் குஜராத்தின் தாவூத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு

தோல்வி பயத்தால் மிரண்டுள்ள பாஜக தேர்தல் வன்முறை  மூலம் பல்வேறு சித்து விளை யாட்டுகளை அரங்கேற்றி வருகிறது. முத லிரண்டு கட்ட தேர்தல்களில் திரிபுராவில்  பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பாஜகவின் கள்ள ஓட்டு மூலம் 100 சத வீதத்திற்கு மேல் வாக்குப்பதிவான நிலை யில், மே 7 அன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் சாம்பல் மக்களவை தொகுதியில் இஸ்லாமியர்களை வாக்களிக்க விடா மல், போலீசார் உதவியுடன் பாஜகவினர்  தாக்குதல் நடத்தினர். 

இந்நிலையில், உத்தரப்பிரதேசத் தைப் போலவே மே 7 அன்று நடை பெற்ற மூன்றாம் கட்டத் தேர்தலில் குஜ ராத் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்க ளவை தொகுதிக்கும் (25 மட்டும்) வாக்  குப்பதிவு நடைபெற்றது. இதில் தாஹூத் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பர்தாம்  பூர் வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு  போட்டதை பாஜக பிரமுகர் விஜய் பாபார் நேரலை வீடியோ மூலம் வெளி யிட்டுள்ளார். இதனை ஆதாரத்துடன் “இந்தியா” கூட்டணிக் கட்சியினர் தேர்தல்  ஆணையத்திடம் புகார் அளித்ததை யடுத்து, விஜய் பாபார் கைது செய் யப்பட்டார். மேலும் பர்தாம்பூரில் உள்ள சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுதில்லி
போராட்டம் நடத்திய 
ஏர் இந்தியா ஊழியர்கள் 25 பேர் நீக்கம்

இந்திய பொதுத்துறை நிறுவன மாக இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனம் கடந்த 2022 ஜனவரி 27 அன்று டாடா என்ற தனியார் நிறுவனத் திற்கு தாரை வார்த்தது மோடி அரசு. நன்கொடை பணத்திற்காக மோடி அரசு  இவ்வாறு செய்துள்ளதாக தகவல் வெளி யாகி விமர்சனத்துக்குள்ளானது. இந்  நிலையில், தங்களது நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி எவ்வித  முன்னறிவிப்பின்றி புதனன்று அதிகாலை  முதல் ஏர் இந்தியா விமான நிறுவன ஊழி யர்கள் (கேபின்) வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். சுமார் 300  ஏர் இந்தியா ஊழியர்கள் இந்த போராட்  டத்தை முன்னெடுத்ததால் நாடு முழு வதும் விமான சேவை மிக மோசமான அள வில் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏர் இந்தியா ஊழியர்  களின் போராட்டத்தை ஒடுக்கும் வகை யில் பணிக்கு வராத, கடமையை சரியாக  செய்யாத ஊழியர்கள் எனக் கூறி 25  பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். இந்த நடவடிக்கை கேபின் க்ரூ எனப்படும் பிரி வில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில்  அனைத்து பிரிவிலும் ஏர் இந்தியா பணி நீக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது.