அண்ணல் அம்பேத்கரை அமித் ஷா அவமதித்துள்ளார். அவர் பதவி விலக வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பிரதமர் மோடி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டு விடமாட்டோம்.
உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்
10 வருடங்களுக்கு முன் 10 லட்சம் ரூபாய்க்கு நீங்கள் கார் வாங்கியிருந்து, இப்போது 1 லட்ச ரூபாய்க்கு நீங்கள் விற்றால், 9 லட்சம் ரூபாய்க்கு 18% ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும். அதாவது 1 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டு, 1,62,000 ரூபாய் வரி கட்ட வேண்டும். மக்களை வதைப்பதில் நிர்மலா சீதாராமன் ஒரு திறமைசாலி.
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண்
குவைத்தில் முஸ்லிம்கள் குடியேறினால் அது “மினி ஹிந்துஸ்தான்” என்று கூறப்படுகிறது. ஆனால் நாட்டில் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்தால் அது “மினி பாகிஸ்தான்” என்று குறிப்பிடப்படுகிறது.
உருது கவிஞர் கௌர் ராசா
தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கை தொடர்பாக நாங்கள் சந்தேகம் கிளப்பவில்லை. ஆனால் தேர்தல் நடைமுறையில் மாநிலம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அதிக உத்தரவாதம் அளிக்க வேண்டிய அவசியம் தற்போது உள்ளது.
பிஜு ஜனதாதள மூத்த தலைவர் அமர் பட்நாயக்
சண்டிகர்
அமித் ஷாவிற்கு எதிராக சண்டிகர் மாநகராட்சி தீர்மானம்
அண்ணல் அம்பேத்கரை அவ மதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி சண்டிகர் மாநகராட்சி யில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அமித் ஷா பதவி விலக் கோரி ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் கொண்டு வந்த தீர்மா னத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கி யது. இதனையடுத்து அமித் ஷாவிற்கு எதிராக சண்டிகர் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றபட்டது.
பாஜக அடாவடி
தீர்மானம் நிறைவேற்றியதை கண்டி த்து பாஜக பாஜக கவுன்சிலர்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கவுன்சி லர்களுடன் பாஜக கவுன்சிலர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பதிலடி கொடுக்க பாஜக கவுன்சிலர்கள் சம்பவ இடத்தைவிட்டு நகர்ந்தனர்.
புதுதில்லி
ஆம் ஆத்மி அறிவிப்பால் கலக்கத்தில் பாஜக
தில்லி மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. பாஜகவின் சித்து விளையாட்டுகளை கண்டு கொள்ளாமல் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு தமிழ்நாடு அரசைப் போல மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தும் வேலையை துவங்கியுள்ளது. தில்லி அரசு 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந் தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி சட்டமாக்கியது. இந்த திட்டம் செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, அரசு பணியாளர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து மானியத்தின் சான்றிதழ் மற்றும் தகுதிகளை சரிபார்க்க உள்ளனர். மேலும், வருவாய் குறைந்த மகளிருக்கு மொத்தம் ரூ.12,000 வரை ஆதரவு வழங்கப்படும். இந்த திட்டம் மகளிரின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் அமையும் என ஆம் ஆத்மி அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தால் பெண்களின் வாக்கு கள் மொத்தமாக ஆம் ஆத்மிக்கு சாயும் என அரசியல் வல்லுநர்கள் கூறி யுள்ளனர். இதனால் பாஜக கலக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.