பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களு க்கு வீட்டை வாடகைக்கு கொடுத் ததாக, வீட்டு உரிமையாளர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வீட்டு உரிமையாளர் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்ட நிலையில், கீழமை நீதி மன்றங்களில் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தியும் அவ ருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
இதையடுத்து வீட்டு உரி மையாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு செவ்வாயன்று விசார ணைக்கு வந்த நிலையில், இரு தரப்பு வாதத்திற்கு பின்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,”ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவை மீறுவதாக அமைந்துவிடும். குற்றச் சாட்டுகள் தீவிரமானதாக இருந்தாலும் சட்டத்தின்படி ஜாமீன் வழக்கை பரிசீலிப்பது நீதிமன்றங்களின் கடமை. ஜாமீன் என்பது விதிமுறை. சிறை என்பது விதிவிலக்கு. எனவே இவ்விரண்டும் உபா உள்ளிட்ட சிறப்பு சட்டங்களுக்கும் பொருந் தும். உபா வழக்குகளிலும் சட்ட விதிப்படி கட்டாயம் ஜாமீன் வழங்கப்பட வேண்டும்” என்று கூறி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த வர்களுக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்த வீட்டு உரிமையாள ருக்கு ஜாமீன் வழங்கி உத்தர விட்டனர்.