ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகம் (டிஆர்டிஓ) சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிக குறைந்த உயரத்தில் இடைமறிப்பு திறனை கொண்ட அதிவேக ஆளில்லா ஏவுகணையான “ஆகாஷ் ஏவுகணை” சோதனை ஒடிசா மாநில கடற்கரை பகுதியான சண்டிபூரில் வெள்ளியன்று காலை 10:30 மணி அளவில் நடைபெற்றது. இந்த சோதனையின் போது வெற்றிகரமாக ஆயுத அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்டது என்றும், ரேடியோ அதிர்வலை கண்டறிதல், லான்ச்சர், பல்துறை செயல்பாட்டு ரேடார், கட்டளை, கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றைக் கொண்ட முழுமையான ஏவுகணை அமைப்பின் செயல்பாடு சரிபார்க்கப்பட்டுள்ளது என டிஆர்டிஓ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.