india

img

கங்கனா ரனாவத்துக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்

விவசாயிகள் போராட்டம் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த பாஜக எம்.பி கங்கனா ரனாவத்துக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகையும், பாஜக எம்.பி-யுமான கங்கனா ரனாவத், விவசாயிகள் போராட்டத்தை வங்கதேச வன்முறையுடன் தொடர்புப்படுத்தியும், இந்தியாவில் இருக்கும் சிலருடன் சேர்ந்து சதி செய்து இந்தியாவை அழிக்க வெளிநாட்டுச் சக்திகள் திட்டமிடுகிறதாகவும், ஒன்றிய அரசின் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் வங்கதேசத்தை போன்று இந்தியாவை மாற்றி இருப்பார்கள் என்றும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதேபோல், விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறினதாகவிம், படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்ததாகவும் பொய்களை அள்ளி வீசியிருந்தார். 
இதைத் தொடர்ந்து, விவசாயிகளைப் பற்றி பேச கங்கனாவுக்கு அதிகாரம் இல்லை, கங்கனாவின் கருத்து பாஜகவின் கருத்து இல்லை என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த பாஜக எம்.பி கங்கனா ரனாவத்துக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், அவரது கருத்துகளை திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு எதிராக வேண்டுமென்றே கலகத்தை ஏற்படுத்தியதற்காக, அவர் மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையீடு செய்துள்ளது.