மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலி யல் வன்முறைகளை அரங்கேற் றிய பாஜக எம்பியும், முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரு மான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆத ரவாளரும், தொழில் கூட்டாளியான சஞ்சய் சிங் புதிய மல்யுத்த கூட்டமைப் பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள் ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிஜ் பூஷன் பாலியல் வன்முறைக்கு நட வடிக்கை எடுக்கக்கோரி போராடியவ ரும், ஒலிம்பிக் பதக்க நாயகியுமான சாக்சி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதே போல மல்யுத்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஒலிம்பிக் பதக்க நாயகனுமான பஜ்ரங் புனியா ஒன்றிய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியின் இல்ல வாசலில் வைத்து, கனத்த இதயத்துடன் மல்யுத்த விளையாட்டில் இருந்து விடை பெற்றார்.
இந்நிலையில், தனது கட்சி எம்பியை காப்பாற்றவே ஒன்றிய மோடி அரசு மல்யுத்த விளையாட்டை சிதைத்துள்ள தாக “இந்தியா” கூட்டணி கட்சிகள், பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரி வித்துள்ளன. இந்நிலையில், நடிகையும் குத்துச்சண்டை வீராங்கனையுமான ரித்திகா சிங்,”சாக்சி எதிர்கொண்ட அவமரியாதை கொடுமையானது” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ட னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மதிப்பு மிக்க வீராங்கனை சாக்சி மாலிக்கை இந்த நிலையில் பார்க்கும் போது இத யம் உடைகிறது. ஒலிம்பிக்கில் இந்தியா வுக்கு பெருமை பெற்றுத்தந்த சாக்ஷி இவ்வளவு ஆண்டுகள் கடின உழைப்பி னையும், கனவுகளையும், நம்பிக்கை களையும் கைவிட்டு ‘நான் விலகு கிறேன்’ எனக் கூறுவது பேரழிவானது. தற்போதும் போராட்டத்தின்போது சாக்சி எதிர்கொண்ட அவமரியாதை கொடுமையானது” எனப் பதிவிட்டு கண் டனம் தெரிவித்துள்ளார். நடிகை ரித்திகா சிங் சாக்சி மாலிக்கின் ஆரம்பகட்ட போராட்டத்தின்போதே ஆதரவு தெரி வித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போதுமான அளவு பேசிவிட்டாராம்
மல்யுத்த வீரர் - வீராங்கனைகளின் விலகல் மற்றும் பத்மஸ்ரீ விருது திருப்பி அளித்தல் தொடர்பாக ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் ஆணவத்துடன் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,”மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர் பான விவகாரத்தில் நான் ஏற்கனவே போதுமான அளவுக்கு பேசி யிருக்கிறேன். இதற்கு மேல் அந்த விவகாரம் குறித்துப் பேசுவ தற்கு ஒன்றும் இல்லை. இனிமேல் சாதனைகள் பெரிய அளவில் பேசப்பட வேண்டும்” என பேசியுள்ளார். அனுராக் தாக்குரின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
வீரேந்தர் சிங்கும் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறார்
பஜ்ரங் புனியாவை போன்று மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் யாத வும் தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்துள் ளார். இதுகுறித்து வீரேந்தர் சிங் யாதவ் தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில், “எனது சகோதரியும் நாட்டின் மகளுமான சாக்சி மாலிக்கிற்கு ஆதரவாக பத்மஸ்ரீ விருதை நானும் திருப்பி அளிக்கிறேன். நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களும் இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தனது முடிவை அறிவிக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மற்றும் தடகள வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோருக்கு டேக் செய்துள்ளார்.