நடைபெறவிருக்கும் 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காகத் தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாக்காளர்களை வாக்களிப்பதற்கு ஊக்குவிக்கவும், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களை தேர்தல் விழிப்புணர்வுக்கான விளம்பர தூதராக இந்தியத் தேர்தல் ஆணையம் அவ்வப்போது நியமித்து வருகிறது.
இந்த நியமனங்கள் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெறும்.
தேசிய அளவில் விழிப்புணர்வு அடையாளமாக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, நடிகர் அமீர் கான் மற்றும் சிலர் இதற்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல தமிழ்நாட்டின் தேர்தல் விளம்பரத் தூதர்களாக பாடகி சித்ரா, நடிகர்கள் நிழல்கள் ரவி, ரோபோ சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரிசையில் நடைபெறவிருக்கும் தற்போது தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.