புதுதில்லி, மார்ச் 11- நாடு முழுவதும் திங்க ளன்று குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில், விதிமுறைகள் உடன் அறிவிக்கையை வெளியிட்டது மோடி அரசு.
பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப்பிரிவின ருக்குக் குடியுரிமை வழங்கு வதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத்திருத்தச் சட்டத்தை (சிஏஏ) கடந்த 2019 டிசம்பர் மாதம் எதிர்க்கட்சி களின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத் தில் நிறைவேற்றியது மோடி அரசு.
பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப்பிரிவின ருக்குக் குடியுரிமை வழங்கு வதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத்திருத்தச் சட்டத்தை (சிஏஏ) கடந்த 2019 டிசம்பர் மாதம் எதிர்க்கட்சி களின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத் தில் நிறைவேற்றியது மோடி அரசு.
முஸ்லிம் மக்களை ஒடுக்கவே மோடி அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து நாடு முழு வதும் லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி சிஏஏ சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட னர். இதனால் சிஏஏ சட்ட த்தை அமல்படுத்துவதற் கான விதிகள் அறிவிக்கப் படுவது நிறுத்திவைக்கப் பட்டது.
இந்நிலையில், மக்கள வைத் தேர்தல் அறிவிக்கப் பட உள்ள நிலையில், சிஏஏ சட்டத்துக்கான விதிகளை ஒன்றிய மோடி அரசு திங்க ளன்று மாலை அவசர அவசர மாக அறிவித்துள்ளது. குடி யுரிமை வழங்குவதற்கான நடைமுறை முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் நடை பெறும் என அறிவிக்கப்பட்டு ள்ளது. இதற்கான இணை யதளமும் தயாராக இருப்ப தாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல் தெரி வித்துள்ளது.