india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் நுழைந்து கண்ணீர் புகை குண்டுகளை சில நபர்கள் வீசியிருக்கும் சம்பவம் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்றம் மீது மிகப் பெரிய அளவிற்கு பயங்கரவாத தாக்குதல் நடந்து டிசம்பர் 13 அன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது. அந்த நாளில், மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் ஒரு தாக்குதல் நடந்திருப்பது எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத  பாதுகாப்பு தோல்வியே ஆகும். 

குண்டு வீசிய நபர்களுக்கு, நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான பரிந்துரை கடிதம் அளித்தவர் கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி., என்பது அதிர்ச்சியளிக்கிறது. உடனடியாக மிக விரிவான முறையில், விரைவான முறையில் இதுகுறித்து விசாரணை நடத்திட வேண்டும்.