சவால்கள் நிறைந்த சூழலிலும், மக்களுக்கு சாதகமான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருப்பதாக தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும் நிதியமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஒன்றிய அரசின் தவறான பொரு ளாதாரக் கொள்கை மற்றும் இயற்கை பேரிடர் இரண்டு முறை தாக்கியும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக் காதது, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு தராதது, கடன் வாங்கும் வரம்புகளில் கடுமையான நிபந்தனை களை விதித்து மாநிலங்களை தவிக்க வைத்திருப்பது, மின்சாரம் உள்ளிட்ட பாரபட்சமான நடவடிக்கைகள் கார ணமாக மாநிலங்கள் கடும் நிதி நெருக்கடிகளுக்கு உள்ளாயின.
ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு, மாநில அரசுகளின் வருமானம் குறைந்து - செலவினங் கள் அதிகரித்துள்ள நிலையில், ஏழை - எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், இளை ஞர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கை யை உருவாக்கும் நோக்கிலும் சிறந்த முறையில் நிதிநிலை அறிக்கை தயா ரிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டில் வறு மைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழை குடும்பங்களில், 5 லட்சம் குடும்பங்க ளுக்கு அரசின் அனைத்து திட்டங்க ளையும் ஒருங்கிணைத்து அவர்களை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் பாராட்டத்தக்கது.
அதேபோன்று, குடிசை இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் மூலம் தமி ழகத்தில் கண்டறியப்பட்ட 8 லட்சம் குடிசை வீடுகளில் ஒரு லட்சம் வீடு களை ஒவ்வொரு வீட்டிற்கும் ரூபாய் 3.5 லட்சம் என்ற வகையில் ஒதுக்கி ஒவ்வொரு வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் மிகச் சிறப்பு வாய்ந்த திட்டம். தமி ழகத்தில் ஏறத்தாழ 50 சதவிகிதம் பேர் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று கொண்டிருக்கும் நிலையில் புதுமைப்பெண் திட்டமும், காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி களுக் கும் விரிவுப்படுத்தப்பட்டிருப் பது வரவேற்கத்தக்கது. தோழி விடுதிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் பயில்வதற்கான கல்விக் கட்டணத்தை முழுமையாக அரசு ஏற்பது, போட்டித் தேர்வு களுக்கான பயிற்சிகளுக்கு உதவி உள்ளிட்ட கல்விசார் முன்னெடுப்பு கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந் தவை என்பதோடு, பாலின ஒதுக்கல் களால் பாதிக்கப்படும் பகுதியின ருக்கான மேம்பாட்டிற்கும் பெரு மளவு உதவும்.
தொழில் புத்தாக்க மையங்கள், தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள், செயற்கை நுண்ணறிவு கல்வி, திறன் மிகு வகுப்பறை, அனைத்து தொழில் படிப்பு மாணவர்கள் கல்விக் கட்டண உதவி ஆகியவை வளர்ந்து வரும் அறிவுசார் இளைய சமூகத்தின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும், தொழில் வளர்ச்சிக்கும் மிகுந்த ஊக்கம் அளிக் கக் கூடியது
. தமிழ்மொழியிலிருந்து பிற மொழி களுக்கும், பிற மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கும் புத்தகங்களை மொழி மாற்றம் செய்வதும், அதற்கு புதிய தொழில்நுட்பங்களை பயன் படுத்துவது ஆகியவை அறிவை பகிர்ந்து கொள்ளும் முயற்சிகள் சிறப்பான முன்னெடுப்புகள். பழங் குடியினர் மொழி வளர்ப்பை பாது காக்கவும், தமிழ் மொழியை மேம் படுத்தவும் எடுக்கப்பட்டுள்ள முயற்சி கள் சிறப்பு சேர்ப்பவை. அடையாறு நதி மீட்பு, 5000 நீர் நிலைகள் புனரமைப்பு, கிராமப்புறச் சாலை மேம்பாடு, சென்னையில் நெருக்கடி மிகுந்த சாலைகள் விரி வாக்கம் என அனைத்தும் எதிர்வரும் காலங்களை முன்வைத்து எடுக்கப் பட்டுள்ள முயற்சிகள்.
பழங்குடியினர் வாழ்விடங்களில் அடிப்படை வசதி களை மேம்படுத்தவும், வாழ்வாதா ரத்தை உயர்த்திடவும் ‘தொல்குடி’ என்ற புதிய திட்டம் அடுத்த நான் காண்டுகளில் 1000 கோடி ரூபாய் மதிப் பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்க அம்சமாகும். மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ள இந்த நிதிநிலை அறிக் கையில் அரசு ஊழியர், ஆசிரியரின் மிக முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு, சுமார் 100 மாதங்களாக நிலுவையில் இருக்கும் போக்குவரத்து ஓய்வூதி யர்களின் அகவிலைப்படி, எம்.ஆர்.பி. செவிலியர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவை பற்றிய அறிவிப்பு இல்லாதது வருத்தமளிக்கிறது.
அரசுத்துறைகளிலும், நிறுவனங்களி லும் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த முறை, தொகுதிப்பூதியம் - காலமுறை ஊதியம் முறை, தினக் கூலி முறையில் பணியாற்றும் ஊழி யர்கள் மற்றும் ஆஷா, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் தங்களது கோரிக்கைகள் நிறைவேற் றப்படும் என எதிர்பார்த்து காத்திருக் கின்றனர்.
இந்த அறிவிப்புகள் இல் லாதது வருத்தமளிக்கிறது. சிறுகுறு தொழில் குறித்தான புதிய முன்மொழிவுகள் பல இருந்த போதும், மின்சார நிலைக் கட்டணம் உள்ளிட்ட சிறு-குறு உற்பத்தியாளர் களின் கோரிக்கைக்கும் செவி சாய்த்தி ருக்க வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதல மைச்சரும், நிதியமைச்சரும் நிதி நிலை அறிக்கை தமிழக சட்டமன்றத் தால் நிறைவேற்றப்படும்போது இப் பகுதியினரின் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டுமென இந் திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.