புதுதில்லி, பிப். 1 - 2024-25ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2047-இல் ‘புதிய இந்தியாவைப் படைப் போம்’ என அறிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறவுள்ள ஆண்டில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப் படுவதே வழக்கம். கொள்கை முடிவு கள் சார்ந்த பெரிய அறிவிப்புகள் எது வும் இருக்காது. எனினும், அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்களின் விலைவாசி உயர் வைத் தடுப்பதற்கான அறிவிப்புகள், குறிப்பாக பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைப்ப தற்கான வரித் தளர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புஇருந்தது.
57 நிமிடங்களில் முடிந்த பட்ஜெட் உரை
ஆனால், இதுகுறித்த எந்த அறி விப்புகளையும் பட்ஜெட்டில் வெளி யிடாத ஒன்றிய அமைச்சர், “இது இடைக்கால பட்ஜெட் என்பதால், இதில் அனைத்தையும் அறிவிக்க முடியாது” என்று வெளிப்படையாகவே கூறி, 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.
காலை 11 மணிக்கு, தனது சம்பிர தாய பட்ஜெட் உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன், வெறும் 57 நிமி டங்களில் உரையை முடித்துக் கொண்டுள் ளார். “அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரை நாட்டை நடத்த இடைக்கால பட் ஜெட் உதவும்” என்று சமாளித்துள்ளார்.
நிதிப்பற்றாக்குறை 5.8 சதவிகிதம்; ரூ. 11.75 லட்சம் கோடி கடன் வாங்கப்படும்
திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடு ரூ. 27.56 லட்சம் கோடி. நிதிப் பற்றாக்குறை 5.8 சதவிகிதம் ஆகும். வரும் நிதியாண்டில் ஒன்றிய அரசின் செலவு ரூ. 44 லட்சம் கோடியாக இருக்கும். 2024-25ல் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.1 சதவிகித்திற்குள் கட்டுப்படுத்தப்படும். 2024 – 25 நிதி யாண்டில் சந்தைகளில் இருந்து 11.75 கோடி கடனாக திரட்ட இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.
“2014-ஆம் ஆண்டுக்கு முன்னர் நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. பாஜக-வின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மேம் பாடு அடைந்துள்ளது. அனைத்து மாநி லங்களுக்குமான வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, சமூக நீதியே அரசின் குறிக் கோள். நிர்வாகத்தில் வெளிப் படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி 2047-இல் புதிய இந்தியாவை படைப்போம்” என்று நழுவியுள்ளார்.
(முழு விபரம் : 5)