புதுதில்லி பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி தனது நிறுவனங்கள் மூலம் பங்குச் சந்தை மற்றும் வெளிநாட்டு முதலீடு களில் பல்வேறு முறைகேடு செய்த தாக அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த 2023 ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது.
இந்த முறைகேடு விவகாரத்தை விசாரிக்க வேண்டிய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணைய மான செபி, உரிய விசாரணை நடத்தாமல் அதானிக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு உண்மை என ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆகஸ்ட் 10 அன்று இரவு தனது 2-ஆவது அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில்,”அதானி மீதான முறைகேட்டை விசாரிக்கா மல் இருக்கவும், இதற்கு கைமாறாக தனது பங்குகளை செபியின் தலை வர் மாதவி புச்சிற்கு அதானி வாரி வழங்கியது” என பல்வேறு தகவல் களை அறிக்கையில் குறிப்பிட்டுள் ளது ஹிண்டன்பர்க் நிறுவனம். அதாவது அதானி தனது முறைகேடு களை மறைக்க மேலும் பல முறை கேடுகளை அரங்கேற்றியதாக ஹிண் டன்பர்க் நிறுவனம் தனது அறிக்கை யில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் முதல் அறிக்கையில் நிகழ்ந்தது போல, இரண்டாவது அறிக்கையிலும் அதானியின் பங்குகள் ஆட்டம் கண்டு வரு கின்றன. ஹிண்டன்பர்க் அறிக்கை யால் வாரத்தின் முதல் நாளான திங்களன்று இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 409 புள்ளி கள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 47 புள்ளிகள் குறைந்து 24,320 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்றது. குறிப்பாக அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் தொடங்கியுள்ள நிலையில், அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை கடும் சரிவை கண்டது. அதாவது சுமார் 7% வரை அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. அதானி குழுமத்தின் 10 நிறுவனங்க ளில் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 53 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. (மதியம் 3 மணி நிலவரம்)
எனினும் மாலை நேர நிலவரப் படி அதானியின் பங்குகள் லேசாக சரிவிலிருந்து மீண்டதாக அதிகா ரப்பூர்வமற்ற தகவல் வெளியா கியது.
அதானியுடன் தொடர்பு இல்லை என்றால் செபியின் டுவிட்டர் எக்ஸ் கணக்கை நிறுத்தியது ஏன்?
செபி தலைவர் மாதவியுடன் எந்த தொடர் ்பும் இல்லை என அதானி குழுமமும், அதானியின் வெளிநாட்டு பங்குகளுக் கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என மாத வியும் ஹிண்டர்பர்க் அறிக்கைக்கு விளக்கம் அளித்த னர். “இருதரப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றால் ஏன் செபியின் டுவிட்டர் எக்ஸ் கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது?” என காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “செபியின் டுவிட்டர் எக்ஸ் கணக்கை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் யாரும் அந்த கணக்கை அணுக முடியாது. சில நாள்கள் அந்த கணக்கு நிறுத்தி வைத்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செபி தலைவர் குறித்த அறிக்கை வெளியாகியுள்ள இந்த நேரத் தில் டுவிட்டர் எக்ஸ் கணக்கை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது புதிராக உள்ளது. பல மாதங்களுக்கு முன்பு வெளிவந்த மோதானியின் ஊழல் தற்போது மீண்டும் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் செபி யின் செயலற்ற தன்மை ஏமாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.இதுதொடர்பாக மேலும் சில கேள்விகள் எழுகின்றன. டுவிட்டர் எக்ஸ் கணக்கு ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? அதானி ஊழலில் செபியின் தலைவரை குற்றம்சாட்டக்கூடிய கடந்தகால பதி வுகள் மற்றும் செய்தி வெளியீடுகள் அமைதியாக நீக்கப்படுகிறதா? இந்த தளம் தேசத்தின் சொத்து. அதனால் பொதுமக்கள் அணுகுவதை அதிகாரிகள் நிறுத்தி வைக்கக்கூடாது. நெருக்கடியான சூழ லில், மக்களுடனான அணுகலை நிறுத்தி வைப்பது முதிர்ந்த சுதந்திரமான சந்தை ஒழுங்காற்று அமைப்புக்கான அடையாளம் அல்ல” என அவர் கூறியுள்ளார்.