india

img

வடமாநிலங்களை மிரட்டும் கனமழை : 32 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர் வடமாநிலங்களில் கடந்த 2 வார காலமாக இடை விடாமல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் நிலை யில், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், தில்லி, இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கனமழையால் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளன.

இதில் ராஜஸ்தான் மாநிலத் தின் நிலைமை மோசமடைந்து வரு கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெஜ்ப் பூரில் கடந்த 24 மணிநேரத்தில் 118  மி.மீ., அளவில் கனமழை புரட்டி யெடுத்துள்ள நிலையில், தோல் பூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்க ளில் 600 மிமீ., அளவில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதே போல பரத்பூர், கரௌலி, தௌசா, சவாய் மாதோபூர் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் கனமழையால் இயல்பு நிலையை இழந்துள்ள நிலையில், பெரும்பாலான மாவட்ட பள்ளிகளுக்கு திங்கள ன்று விடுமுறை அளிக்கப்பட்டுள் ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும்  கனமழைக்கு 17 பேர் உயிரிழந் துள்ளதாகவும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 12க்கும் மேற்பட் டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

பஞ்சாபில் 9 பேர் பலி...

பஞ்சாப் மாநிலத்தின் எஸ்பி எஸ் நகர் மாவட்டத்தின் மெஹ்ரோ வல் கிராமம் அருகே ஆற்றில் கார் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 9 பேர் உயிரிழந்தனர். காணாமல் போன 2 பேரை தேடும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. 

ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங் ்களைப் போல உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம் மாநிலங்க ளிலும் கனமழையில் சிக்கி உயிரி ழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வட மாநிலங்கள் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழைக்கு உயிரி ழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.