உச்ச நீதிமன்றத்துக்கு மேலும் 2 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
கொலீஜிம் பரிந்துரை செய்திருந்த 5 உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி பதவியேற்றனர். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு மேலும் 2 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உட்பட உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.