நைஜீரிய அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்தியர்கள் 18 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 3-ஆம் தீதி, ஹாங்காங் எண்ணெய் கப்பல் ஒன்று நைஜீரிய கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, 18 இந்தியர்கள், ஒரு வெளிநாட்டவர் உட்பட 19 பேர் கப்பலுடன் கடத்தப்பட்டனர். இதை அடுத்து, இந்திய தூதரகம் நைஜீரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்தியர்களை மீட்பதற்கான முயற்சிகளில் இறங்கியது. இதை தொடர்ந்து, நைஜீரிய கடற்படை அதிகாரிகளின் தொடர் தேடலுக்கு பிறகு இந்தியர்கள் கடத்தப்பட்ட இடம் கண்டறியப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இந்திய தூதரகம் , இந்தியர்களை மீட்க உதவிய நைஜீரிய அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளது.