நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி 15 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த வண்ணங்களை கக்கும் புகைக்குண்டுகளை வீசிய விவகாரத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதாக கூறி மக்களவை எம்.பி-க்கள் கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், சுப்பராயன், பி.ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.பார்த்திபன், பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத், டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், ரம்யா ஹரிதாஸ், ஹைபி ஈடன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் கோஷங்களை எழுப்பினார் என்று குளிர் கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து மக்களவையில் அமர்ந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.