கடந்த 2018 ஜூன் 16 அன்று பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தின் ஹபூரில் இஸ்லாமியரான காசிம் (45) என்ற ஆடு வியாபாரி, தனது உறவினர் களான சமய்தீன் (65), யாசின் (30) காட்டுப் பகுதியில் ஆடுகளுக்கு தீவனம் சேகரிக்கச் சென்றனர். பசுக் களை கொன்றதாக கூறி 11 பேர் கொண்ட இந்துத்துவா குண்டர்கள் பொய்க் குற்றச்சாட்டுகளை முன் வைத்து மூவர் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் காசிம் (45) உயிரிழந்தார். சமய்தீன், யாசின் காயங்களுடன் உயிர்தப்பினர். இது தொடர்பாக காசிமின் குடும்பத்தி னர் காவல்துறையில் புகார் அளித்த னர். ஆனால் இந்துத்துவா குண்டர் களுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் சமய்தீன், யாசின் ஆகிய இருவரையும் மிரட்டி மோட்டார் சைக்கிள் விபத்தின் விளைவாக காசிம் உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்தனர். மேலும் விபத்து நடைபெற்றது போலவே காசிம் உடலை வைத்து சினிமா ஷூட்டிங்கையும் நடத்தியுள்ளனர்.
இதனால் காசிமின் குடும்பத்தி னர் போலீசார் மற்றும் இந்துத்துவா குண்டர்களின் மிரட்டலுக்கு இடையே ஹபூர் மாவட்ட நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தனர். காசிம் மற்றும் சமய்தீன் குடும்பத்தினர் உச்சநீதிமன்றம் சென்று போரா டிய பின்னர், உச்சநீதிமன்ற வழி காட்டுதலின்படி ஐந்தரை ஆண்டு களாக நடைபெற்று வரும், இந்த வழக்கு இந்த ஆண்டு (2024) இறு திக்கட்டத்தை எட்டியது.
போலீசாரின் அறிக்கைகளை புறந்தள்ளி, சாட்சிகளின் உண்மை யான விசாரணை மூலம் காசிம் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயி ரிழக்கவில்லை என்றும், விபத்தில் ஏற்படும் காயங்களுக்கு மாறாகவே காசிமின் காயங்கள் உள்ளன என் றும், அவர் பசுவைக் கொன்றதா கக் கூறி கொலை செய்யப்பட்டுள் ளார் என்றும் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஸ்வேதா தீட்சித் செவ்வாயன்று தீர்ப்பு வழங்கி னார்.
காவல் அதிகாரிகளும் குற்றவாளிகளே
157 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை வாசித்த நீதிபதி ஸ்வேதா தீட்சித்,”ஆடு வியாபாரி காசிம் (45) கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்டது மிக கொடூரமான விஷயம் ஆகும். ஹபூர் வழக்கில் ஒரு அப்பாவி மனிதனைக் கொன்ற கும்பலின் நடத்தை ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒரு எச்சரிக்கை மற்றும் அச்சுறுத்தல் ஆகும். இத னால் காசிமை கொன்ற வழக்கில் தொடர்புடைய 11 பேர் (இந்துத் துவா கும்பல்) குற்றவாளி ஆவார் கள். அவர்களுக்கு ஆயுள்தண் டனை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கு விசாரணையில் அலட்சியமாக இருந்த காவல் துறை அதிகாரிகள் அனைவரும் குற்றவாளிகளே. அதனால் வழக் குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்த நீதிமன்றம் பரிந்து ரைக்கிறது” என கூறினார். குற்ற வாளிகள் 11 பேரில் ஒருவர் மைனர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்க நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக காசிம் மற்றும் சமய்தீன் குடும்பத்தினர் செய்தியா ளர்களிடம் தெரிவித்தனர்.