வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு செய்ததாக பிபிசி நிறுவனத்தின் மீது அந்நிய செலவாணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு.
2002 ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை ஒன்றை அண்மையில் பிபிசி வெளியிட்டிருந்தது.பிரதமை மோடிக்கு எதிராக இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டதாக ஒன்றிய அரசு குற்றம் சாட்டி ஆவணப்படத்தை பார்ப்பதற்கும், திரையிடவும் தடை விதித்திருந்தது.
இதனை தொடர்ந்து ஆவணப்படம் வெளியான சில நாட்களிலேயே பிபிசி நிறுவனத்தில் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமன வரித்துறை சோதனை நடைபெற்றது.
தற்போது வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு செய்ததாக கூறி பிபிசி நிறுவனத்தின் மீது அந்நிய செலவாணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.