புதுதில்லி, அக்.12- “உலக நாடுகளுக்கு இடையே யான சிக்கல்களை பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் ரீதியிலான முயற்சி கள் மூலமே தீர்க்க முடியும்” என்று லாவோசில் நடைபெற்ற 19-ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரத மர் நரேந்திர மோடி கூறினார்.
மேலும் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இது போருக்கான சகாப்தம் அல்ல, போர்க்களத்தில் இருந்து சிக்கல் களுக்கு தீர்வு கிடைக்காது. உலகளா விய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு, தீவிரவாதம் ஒரு குறிப்பிடத்தக்க அச்சு றுத்தலாக திகழ்கிறது. மனித நேயத் தின் மூலம் இந்த சவாலை எதிர்கொள் வதற்கு படைகளுக்கு மத்தியில் கூட் டாண்மை தேவை. இறையாண்மை, பிராந்திய ஒற்றுமை, சர்வதேச சட்டங் களுக்கு மதிப்பளிக்கப்பட வேண் டும்.
உலகின் பல்வேறு நாடுகளில் நடை பெற்றுவரும் மோதல்கள் குறிப்பி டத்தக்க அளவுக்கு தெற்கில் உள்ள நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்து கின்றன. இந்த மோதல்கள், தெற்கில் உள்ள நாடுகளின் வளர்ச்சி மற்றும் வலி மைக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
தெற்குச் சீனக் கடல் பகுதி பாது காப்பு என்பது இந்தோ - பசுபிக் பிராந்தி யத்தின் ஒட்டு மொத்த வலிமைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடல் பயணம் மற்றும் வான்வெளி ஆகிய வற்றில் சுந்திரமான தன்மையை உறுதி செய்ய கடல் பகுதி நடவடிக்கைகள் அனைத்தும் கடல் சட்டம் பற்றிய ஐக் கிய நாடுகளின் ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இதுவரை நடைபெற்ற கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் 19-இல் 9 முறை பிரதமர் மோடி பங்கேற்றிருக்கி றார். 19-ஆவது மாநாட்டிலும் முதலா வது நபராக அழைக்கப்பட்டு, பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.