india

img

அமிர்த      காலம்

பாற்கடலை
அசுரர்கள்
வியர்வை
சொட்டச்சொட்டக்
கடைந்தனர்.

தேவர்கள்
காவிக்கொடி நிழலில்
‘அச்சாதீன்’ பாடி
கண்டு களித்திருந்தனர்.

நிர்மலமாய் சிவனார்
நொடிக்கொரு
உடை அணிந்து
தலைமையேற்று
வழிகாட்டிக் 
கொண்டிருந்தார்.

திரண்ட அமிர்தத்தை
திரட்டி எடுத்து
தேவர்கள்
வாயில் ஊட்டிவிட்டார்
சிவனார்.

கக்கிய நஞ்சை
வழித்துண்ணுமாறு
அசுரர்களுக்கு
அருளாசி வழங்கினார்
சிவனார்.
 
அமிர்த காலமென
சிவனாரும் தேவர்களும்
குதூகலிக்க
கலிகாலமென
அசுரர்கள்
கண்ணீர்விட்டனர்.
சு.பொ.அகத்தியலிங்கம்

;