india

img

மீன்பிடிப்பில் வளர்ந்த நாடுகளுக்கு ஆதரவாக உலக வர்த்தக அமைப்பு செயல்படுகிறது.... உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் இந்தியா கடும் குற்றச்சாட்டு....

புதுதில்லி:
வளர்ந்த நாடுகளின் அதிகளவிலான மீன்பிடிப்பால் இந்திய மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வளர்ந்த நாடுகளுக்குஆதரவாக உலக வர்த்தக அமைப்பு செயல்படுகிறது என்று ஒன்றிய வர்த்தகத்துறை  அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாக குற்றம்சாட்டினார்.

முக்கியத்துவம் வாய்ந்த மீன்பிடித் தொழில் மானிய பேச்சுவார்த்தைகள் பற்றிஉலக வர்த்தக அமைப்பின் அமைச்சகங்கள்இடையேயான கூட்டம் ஜூலை 15 அன்று நடைபெற்றது. இதில் உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் நிகோசி, இதர உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் தூதர்கள் கலந்துகொண்டனர்.இந்தக் கூட்டத்தில் ஒன்றிய வர்த்தகம்- தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல்பேசுகையில், இந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்வதில் இந்தியா தீவிரமாக உள்ளது. முரணான மானியங்கள் மற்றும் ஒரு சிலநாடுகளின் அதிகளவிலான மீன்பிடிப்பால்இந்திய மீனவர்களும் அவர்களது வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தஒப்பந்தத்தில் சம அளவு மற்றும் நேர்மை இன்னும் கண்டறியப்படவில்லை. முன்னர் உருகுவே சுற்றின்போது மேற்கொண்ட தவறுகளால், வேளாண்மை போன்ற துறைகளில் குறிப்பிட்ட வளர்ந்த உறுப்பு நாடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் போன்று தற்போதும் நாம் தவறு செய்யக்கூடாது.  

மீன்வளத் திறன்களை இன்னும் மேம்படுத்த வேண்டிய இந்தியா உள்ளிட்டநாடுகளால் தங்களது எதிர்கால லட்சியங்களை தியாகம் செய்ய முடியாது.வளர்ந்த நாடுகளைத் தொடர்ந்து மானியங்கள் வழங்க அனுமதிப்பது நியாயமற்றது. தற்போதைய மற்றும் வருங்கால மீன்பிடித் தேவைகளை சமநிலைப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் மீன்பிடி திறன்களில் சமமான வளர்ச்சிக்கான இடத்தை பாதுகாப்பதற்கும், எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லாமல்பயனுள்ள சிறப்பு மற்றும் தனிப்பட்ட நடைமுறைகள் வழங்கப்பட்டால் பேச்சுவார்த்தையை நிறைவு செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று தெரிவித்தார்.

;