india

img

சாமியார் ராம்தேவ் மீது நடவடிக்கை எடுத்திடுக... இந்திய மருத்துவ  சங்கம் கோரிக்கை....

புதுதில்லி:
யோகா குரு என்றுதம்மைத் தாமே அழைத்துக்கொள்பவரும் பாஜக,ஆர்எஸ்எஸ் நிறுவனங்களுக்கு நெருக்கமானவருமான பாபா ராம்தேவ்  அறிவியலுக்குப் புறம்பாக, அலோபதி மருத்துவத்துக்கு எதிராக, அதுபற்றி முழுமையாகத் தெரியாமல் கூறி மக்களைத் தவறாக வழிநடத்தி வருகிறார். அவர் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) வலியுறுத்தி உள்ளது.இது தொடர்பாக ஐஎம்ஏ  சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:-ராம்தேவ் மீது தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட வேண்டும், அவரது அறிக்கைகளால் “நாட்டின் கல்வியறிவுள்ள சமூகம், இரையாகிவிடும் என்பது மட்டுமல்ல  ஏழை மக்களை அச்சுறுத்துவது போலவும் உள்ளது.

சமூக ஊடகங்களில் பரவிய ஒரு வீடியோவை மேற்கோள் காட்டியுள்ள,  (ஐ.எம்.ஏ) “ராம்தேவ் அலோபதி ஏக் ஐசி முட்டாள் அவுர் தீபாவல்லியா அறிவியல் ஹை (அலோபதி அறிவியல் முட்டாள்தனமானது)” என்றுகூறியதை சுட்டிக்காட்டியுள்ளனர்.அமைச்சர் ஹர்ஷவர்தன் இந்த விஷயத்தில் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தி உண்மையைச் சாமானிய மக்களுக்குக் கூறுவோம். நீதித்துறையின் கதவுகளையும் தட்டுவோம். சட்டரீதியாக நடவடிக்கை கோருவோம் என்று தெரிவித்துள்ளார்.

;