india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 15 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் தனி விமானம் மூலம் குரோஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

                                           ****************

உலகின் சிறந்த கல்வி நிறுவனப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் கூட இடம்பெறவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

                                           ****************

இந்தியா முழுவதும் 9 அரசு மருத்துவமனைகளில் பிராணவாயு (ஆக்ஸிஜன்) உற்பத்தி ஆலைகளை நிறுவ உள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

                                           ****************

ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ் அப் தகவல் பரிமாற்ற செயலியிலிருந்து பயனாளர்களின் தகவல்களை பயன்படுத்துவதற்கு ஜெர்மனை சேர்ந்த தனியுரிமை கண்காணிப்பு அமைப்பு தடை விதித்துள்ளது.

;