புதுதில்லி, ஆக. 10- பட்டியலினத்தவர், பழங்குடி யினருக்கான (எஸ்.சி., எஸ்.டி.) இடஒதுக்கீட்டில் சமூக பொருளா தார ரீதியில் மேம்பட்டவர்களுக்கு விலக்கு அளிக்கும் நடைமுறை (கிரீ மிலேயர்) எதுவும் கொண்டுவரப் படாது என வெள்ளிக்கிழமை நடை பெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஒன்றிய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்துள்ளார்.
அதில், “எஸ்.சி., எஸ்.டி. பிரிவின ருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு தொடர்பாக அமைச்ச ரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது.
சட்டமேதை அம்பேத்கர் உரு வாக்கிய அரசமைப்புச் சட்டத்தின் படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவு இட ஒதுக்கீட்டில், சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்கள் பலன் பெறுவதிலிருந்து விலக்கு அளிக் கும் நடைமுறை எதுவும் கொண்டு வரப்படாது. அரசமைப்புச் சட் டத்தில் குறிப்பிட்டுள்ளபடி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். இதுவே ஒன்றிய அமைச்சரவையின் முடிவாகும்” என்று தெரிவித்துள்ளார்.