india

img

நானாவது, பாஜகவில் இணைவதாவது... ரீட்டா பகுகுணா, ஒருவேளை சச்சின் டெண்டுல்கரிடம் பேசியிருப்பார்...

ஜெய்ப்பூர்:
உ.பி. மாநிலத்தில் காங்கிரசின் முக்கியத் தலைவராகவும், பிராமணர்கள் மத்தியில் ஓரளவு செல்வாக் குள்ள நபராகவும் விளங்கிய ஜிதின் பிரசாதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.

அவரைத் தொடர்ந்து, காங்கிரசின் மற்றுமொரு இளம் தலைவரும்,ராஜஸ்தான் முன்னாள் துணைமுதல் வருமான சச்சின் பைலட்டும் பாஜக-வில் இணைவார் என்று யூகங்கள் வெளியாகின. சச்சின் பைலட், ஏற்கெனவே 2020ஆகஸ்ட்டில் 19 காங்கிரஸ் எம்எல்ஏக் களுடன் பாஜக-வில் சேர முயன்றவர். இந்த முயற்சியில் அவரது துணைமுதல்வர் பதவியையும் பறிகொடுத்தவர். அவர் இம்முறை பாஜக-வில் சேருவது உறுதி என்று பேச்சுக்கள் எழுந் தன.அதற்கேற்பவே, பாஜக தலைவர் களில் ஒருவரான ரீட்டா பகுகுணா ஜோஷி, சச்சின் பைலட்டிடம் பேசியதாகவும், அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்றும் பரபரப்பைக் கிளப்பினார்.

இதனிடையே, பெட்ரோல் - டீசல்விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ்நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சச்சின் பைலட் கலந்து கொண்ட நிலையில், அவரிடம் பகுகுணாவின் கூற்று குறித்துசெய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “ரீட்டா பகுகுணா ஜோஷி,சச்சினுடன் பேசியதாகத் தெரிவித்துள் ளார். அவர், சச்சின் டெண்டுல்கரிடம் பேசி இருக்கலாம். என்னிடம் பேச அவருக்கு தைரியம் கிடையாது” என்று சச்சின் பைலட் பதிலடி கொடுத்துள்ளார்.ரீட்டா பகுகுணா ஜோஷி, மறைந்தகாங்கிரஸ் தலைவரும் உ.பி. முன்னாள்முதல்வருமான எச்.என். பகுகுணாவின் மகள் ஆவார். இவர், 2016-இல் பாஜகவுக்குத் தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

;