india

img

தில்லி: பிப்ரவரி 5 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகள் திறப்பு

தில்லி, ஜன.29-
தில்லியில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இதனைதொடர்ந்து, தில்லியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில், தில்லியில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

;