india

img

காலத்தை வென்றவர்கள் : சிட்டகாங் வீராங்கனை கல்பனா பிறந்தநாள்....

கல்பனாதத்தா சிட்டகாங் மாவட்டத்தின் (தற்போதைய வங்கதேசத்தின் பெல்காலிய உபசீலாவில்) 1913 ஜூலை 27ல் பிறந்தார். சிட்டகாங்கில் ஆரம்பக்கல்வி பயின்ற இவர் பிறகு கொல்கத்தா பெத்தன் கல்லூரியில் அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். 

கல்பனா “இந்திய குடியரசு இராணுவத்தின், சத்தாகிராம் கிளை” யில் இணைந்தார். சரண் சென் தலைமையிலான ஆயுதம் தாங்கிய போராளிக் குழு ஒன்று 1931 ஆம் ஆண்டு மே மாதத்தில் உருவாக்கப்பட்டது, அதே ஆண்டின் செப்டம்பர் மாதம் “சூர்யா சென்”னிடம் சென்று சேர்ந்தார். இவர்கள் “பிரிட்டிலாடா வதேடாருடன்” இணைந்து சிட்டகாங்கில் உள்ள ஐரோப்பிய விடுதியைத் தாக்க திட்டமிட்டனர். தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்பு, அந்த பகுதியில்உளவுபார்க்கும் போது இவர் கைது செய்யப்பட்டார். பிணையில் விடுதலை செய்யப்பட்டபின் அவர் மறைந்து வாழ்ந்தார். இந்நிலையில்1933 பிப்ரவரி 17, அன்று காவலர்களால், சூர்யா சென் கைது செய்யப்பட்டார். ஆனால் கல்பனா தப்பித்துக்கொண்டார். இறுதியாக 1933 மே 19 அன்று கைது செய்யப்பட்டார். சிட்டகாங் ஆயுத தாக்குதல் வழக்கு விசாரணையில், கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 1939 இல் கல்பனா விடுதலை செய்யப்பட்டார்.

கல்பனா 1940 ஆம் ஆண்டில் கொல்கத்தா பெத்தன் கல்லூரியில் சேர்ந்து அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.  விவசாயிகள் மற்றும் பெண்களை அணிதிரட்டுவதில் கல்பனா முக்கியப் பங்காற்றினார்.
1943 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான பி.சி. ஜோஷியை மணந்தார். 1943 வங்கப் பஞ்சம் மற்றும் 1947 வங்கப் பிரிவினைடியின் போது நிவாரணப் பணியாற்றினார். அவர் வங்க மொழியில் சுயசரிதையை எழுதினார். 1995 பிப்ரவரி 8 இல் கொல்கத்தாவில் காலமானார்.

பெரணமல்லூர் சேகரன்

;