india

img

ரயில்வே தேர்வை 2.44 கோடி பேர் எழுதுகின்றனர்.... கொரோனா இல்லை என கடிதம் ஒப்படைக்க வலியுறுத்தல்

புதுதில்லி:
ரயில்வே துறையில் காலியாகஉள்ள 1.40 லட்சம் பணியிடங்களைநிரப்ப கணினி அடிப்படையிலானதேர்வு 3 கட்டங்களாக நடைபெறுகிறது.இந்த தேர்வை 2.44 கோடி பேர் எழுதுகின்றனர் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரியத்தின்மனிதவளப் பிரிவு இயக்குநர் ஆனந்த்எஸ்.காத்தி வெளியிட்டுள்ள அறிவிப் பில் கூறியிருப்பதாவது:‘ரயில்வேயில் காலியாக இருக்கும்1.40 லட்சம் இடங்களை நிரப்ப 3 கட்டங்களாக கணினி அடிப்படையில் தேர்வு நடத்தப்பட உள்ளது. 2.44 கோடிப்பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். முதல் சுற்றுத் தேர்வு டிசம்பர் 15 முதல்18 ஆம் தேதி வரையிலும், இரண்டாவது சுற்றுத் தேர்வு டிசம்பர் 28 முதல் 2021 மார்ச் மாதம் வரையிலும், மூன்றாவது சுற்றுத் தேர்வு 2021 ஜூன் வரையிலும் நடைபெறும்.இந்தத் தேர்வுக்கு வருவோர் அனைவரிடமும் கொரோனா இல்லை என நெகட்டிவ் சான்றிதழ் கோருவது சாத்தியமில்லை என்பதால், தேர்வு எழுத வருவோர் தங்களுக்குக் கொரோனா இல்லை,அமர்ந்து தேர்வு எழுதும் அளவுக்கு உடல் தகுதி இருக்கிறது எனக் கடிதம்எழுதிக் கொண்டுவர வேண்டும். தேர்வுக்கு முன் இந்தக் கடிதத்தை ஒப்படைக்க வேண்டும்.

தேர்வு மையத்துக்கு தேர்வு எழுதவருவோர் வெப்பமானியில் பரிசோதிக்கப்படுவார்கள். நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மீறி உடல் வெப்பம் இருந்தால்,அந்தத் தேர்வாளருக்கு வேறு நாளில்தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குறைந்த பயணநேரத்தில் தேர்வு மையம்
பெரும்பாலும் தேர்வு எழுதுவோருக்கு அந்தந்த மாநிலத்திலேயே தேர்வுமையம் அமைக்கப்படும். அதிலும் குறைந்த அளவு பயண நேரம் இருக்கும்வகையில் தேர்வு மையம் இருக்கும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டுஇந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பாக ஆர்ஆர்பி இணையதளத்திலிருந்து மின் அழைப்புக் கடிதத்தை தேர்வு எழுதுவோர் பதிவிறக்கம் செய்யலாம். அடுத்தகட்டத் தேர்வு குறித்து விரை
வில் தெரிவிக்கப்படும். தேர்வு எழுத வருவோருக்கு வசதியாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

ரயில்வே தேர்வுக்கு வரும் தேர்வாளர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றை மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், உள் ளாட்சி நிர்வாகங்கள் செய்து தருமாறு ரயில்வே சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இந்த 1.40 லட்சம் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுபவர் களுக்கு எந்தவிதமான நேர்முகத் தேர்வும் இல்லை. முழுவதும் மதிப்பெண்அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தேர்வு தொடர்பானபணிகள் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வேலைவாய்ப்பு உறுதிக் கடிதம் வழங்க ஓராண்டு ஆகும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

;