india

img

தேர்தலுக்குப் பிறகு மேற்குவங்கத்தில் 15 ஆயிரம் வன்முறைகள்... ஒன்றிய அரசிடம் உண்மை கண்டறியும் குழு அறிக்கை....

புதுதில்லி:
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறைகள் குறித்து ஒன்றிய அரசிடம் உண்மை கண்டறியும் குழு அறிக்கை அளித்துள்ளது. 

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில்  ஆளும் திரிணாமுல்காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக வெற்றிபெற்றது. போட்டியிட்ட தொகுதியில் தோற்றாலும் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். இதன்பிறகு திரிணாமுல் கட்சியினர் தங்களுக்கு வாக்களிக்காத மக்கள் மீதும் எதிர்க்கட்சியினர் மீதும் கொடூரத் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட இடதுசாரிக்கட்சியினர், காங்கிரஸ், பாஜகவினர் மீது தாக்குதல் தொடுத்தனர். பெண்களையும் விட்டுவைக்கவில்லை. இதுகுறித்து  சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பிரமோத் கோலி தலைமையிலான 5 பேர் கொண்ட, ‘கால் பார் ஜஸ்டிஸ்’ என்று அமைப்பின் உண்மை கண்டறியும் குழு மேற்கு வங்கம் சென்று விசாரித்தது. இக்குழு தனது  அறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், “. 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 7 ஆயிரம் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர். 16 மாவட்டங்களில் அதிகளவில் வன்முறை நடந்துள்ளன. ஏராளமான மக்கள் தாக்குதலுக்கு மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவு வெளியான பிறகு மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளனபயந்து அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டனர்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

;