india

img

10.43 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது....

புதுதில்லி:
நாடுமுழுவதும் இதுவரை மொத்தம் 10 லட்சத்து 43 ஆயிரத்து 534 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிபோடும் பணியை  ஜனவரி 16 அன்று  பிரதமர்மோடி தொடங்கி வைத்தார். தடுப்புமருந்து பெற்றுக்கொண்டவர்களில் சிறிய அளவிலான உபாதைகள் ஏற்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில் நாடுமுழுவதும் வெள்ளிக்கிழமையன்று காலை நிலவரப்படி மொத்தம்10 லட்சத்து 43 ஆயிரத்து 534 பேருக்குகொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப் பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

;