சென்னை,பிப்.04- ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய 2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லாததைக் கண்டித்தும், மானியத்தை அதிகளவு குறைத்தது உள்ளிட்ட மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தழுவிய ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.