india

img

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை!

அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளாது.

கடந்த 2019-ல் மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரின் நடந்த பேரணியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பங்கேற்றார். அதில், ”எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதை அடுத்து,  மோடி என்ற குடும்ப பெயரை மையப்படுத்தி ராகுல் அவதூறாக பேசியது தொடர்பாக பாஜக எம்எல்ஏ மற்றும் குஜராத் முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி ஆகியோர் குஜராத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி சூரத் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேல்முறையீடு செய்வதற்காக ராகுல் காந்திக்கு பிணை வழங்கிய நீதிமன்றம், ரூ.15,000 பிணைத்தொகை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. 

;