india

வீட்டுக்காவலில் மருத்துவ மாணவியின் பெற்றோர் மம்தா அரசு மீது ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குற்றச்சாட்டு

கொல்கத்தா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கே. மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன் கொலை செய்யப்பட்டார். இந்த விவ காரம் தொடர்பாக மருத்துவமனை பணி யாளர் சஞ்சய் ராய் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் (ஆர்ஜிகே மருத்துவமனை) சந்தீப் கோஷ் உள்ளிட்ட 3 பேர் சிபிஐ வளையத்தில் உள்ளனர். 

இந்நிலையில், பாலியல் வன்கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் பெற்றோர்கள் வீட்டுக்காவ லில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநில தலைவர ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகை யில், “பாலியல் வன்கொலை செய்யப் பட்ட மருத்துவ மாணவியின் வீட்டுக்கு சென்று, அவரின் பெற்றோரிடம் நீண்ட நேரம் உரையாடினேன். மாணவியின் பெற்றோர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மாணவியின் பெற்றோர்களை வீட்டை விட்டு வெளி யில் வரக்கூட கொல்கத்தா காவல் துறை அனுமதிப்பதில்லை. இதனால் அவர்களால் எந்தப் பணியும் செய்ய முடிவதில்லை. வீட்டைச் சுற்றி தடு ப்புகள் அடுக்கப்பட்டுள்ளது. காவல் துறைக்கு ஆளும் திரிணாமுல் காங்கி ரஸ் அறிவுரைகளை வழங்கி வருவதால் காவல்துறை மாணவியின் வீட்டை தங் களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது” என குற்றம் சாட்டினார்.

பெற்றோரிடம் பேரம்  பேசிய காவல்துறை

மேலும்,”மாணவியின் உடலை உடனடியாக எரிப்பதற்கு அவரது தந்தைக்கு பணம் கொடுக்கிறோம் என்று போலீசார் வற்புறுத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு தாமதமில்லாமல் உங்கள் மகளின் உடலை எரியூட்ட வேண்டும் என கொல்கத்தா போலீசார் மாண வியின் பெற்றோர்களை மிரட்டியுள்ள னர்” என அவர் கூறியுள்ளார். 

ஆதிர் ரஞ்சன் செளத்ரியின் இந்த கருத்தால் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மேற்கு வங்க காவல்துறையின் செயல்பாடுகளுக்கு நாடு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களும் எழுந்து வருகின்றன.