india

img

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : உயிர் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றம் ...

பெங்களூரு 
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் மனைவி உட்பட 13 பேர் பலியாகினர். இந்த விபத்தில் படுகாயத்துடன் உயிர்பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் கமாண்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். வருண் சிங்கின் சொந்த ஊர் உத்தரப் பிரதேச மாநிலம் ஆகும். ஆனால் அவரது குடும்பத்தினர் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் வசிக்கிறார்கள். தேஜாஸ் விமானத்தை பெரும் விபத்திலிருந்து மீட்டு பலரது பாராட்டுக்களையும், அதற்காக செளர்ய சக்ரா விருதையும் பெற்றவர் தான் வருண் சிங். 

;