india

img

திருமண விழாவில் நல்ல பாம்பை வைத்து நாகினி ஆட்டம்...வித்தை காட்டிய நபர் கைது  

ஒடிசாவில் திருமண விழாவில் நல்ல பாம்பை வைத்து நாகினி ஆட்டம் ஆடி வித்தை காட்டிய வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.  

ஒடிசாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் கரஞ்சியா பகுதியில் கடந்த புதனன்று நல்ல பாம்பை வைத்து நாகினி ஆட்டம் ஆடி 5 பேர் வித்தை காட்டியுள்ளனர். அப்போது கூடையிலிருந்து வெளியே வரும் பாம்பை கொண்டு வீரர் வித்தை காட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது.  

இந்த சம்பவத்தால் அஞ்சிய அப்பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை மீட்டனர். மேலும் பாம்பை வைத்து வித்தை காட்டிய 5 பேரை வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  

விசாரணையில், பாம்பின் விஷத்தை முறித்து இவ்வாறு ஆடியதும், அதிக ஒலி கொண்ட பாடலை ஒலிபரப்பியதால் அந்த பாம்பு அதிர்ந்து போயிருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.