india

img

2 மடங்கு விலை உயர்ந்தால் யார் வாங்குவார்கள்? உஜ்வாலா திட்ட சிலிண்டர்கள் 90% பயன்பாட்டில் இல்லை.... பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு...

லக்னோ:
சமையல் எரிவாயு இணைப்பை இலவசமாக வழங்கும் ‘பிரதான் மந்திரி உஜ்வாலாயோஜனா’ திட்டத்தை ஒன்றிய பாஜக அரசுமீண்டும் துவங்கியுள்ளது.விரைவில் தேர்தல் வரவுள்ள உத்தரப் பிரதேசத்தில் ‘உஜ்வாலா 2.0’ திட்டத்தின் துவங்க விழா இரண்டு நாட்களுக்கு முன்புநடைபெற்றது. கூடுதலாக ஒரு கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புவழங்கும் இந்த திட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்நிலையில், உஜ்வாலா யோஜனா திட்ட சிலிண்டர்கள் 90 சதவிகிதம் பயன்படுத்தப்படுவது இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

‘‘உஜ்வாலா திட்டத் தின் கீழ் விநியோகிக் கப்பட்ட 90 சதவிகித சிலிண்டர்கள் பயன் படுத்தப்படாமல் கிடக் கின்றன. பெண்கள் மீண்டும் அடுப்பில் சமைக்கும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசானது, கடந்த 7 ஆண்டுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்விலையை இரண்டு மடங்கு உயர்த்தியுள் ளது. சிலிண்டருக்கு வழங்கும் மானியத்தையும் மிகவும் சொற்பத் தொகையாக குறைத்துவிட்டது. உஜ்வாலா திட்டம் குறித்து அரசு நேர்மையானதாக இருக்கும் பட்சத்தில் ஏழைகளுக்கு மானியத்தை வழங்க வேண்டும். பண வீக்கத்தை குறைக்க வேண்டும்” என்று பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

;