india

img

உ.பி யில் கொடூரம் - ஓடும் ரயிலில் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் 

லக்னோவிலிருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கொள்ளையர்களால் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து, மராட்டியத்தின் மும்பை நோக்கி நேற்று புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது மும்பைக்கு 120 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள லகட்புரி நகரில் உள்ள நிலையத்திற்கு ரெயில் சென்ற போது ஏ.சி. பெட்டியில் பயங்கர ஆயுதங்களுடன் 8 கொள்ளையர்கள் ஏறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டி பயணிகளிடம் இருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். 

மேலும் பெண் பயணி ஒருவரையும்  கூட்டுப் பலாத்காரம் செய்தனர். இதனைத் தடுக்க முயன்ற சக பயணிகளை ஆயுதங்களால் தாக்கினர். அதில் சில பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டது.இந்நிலையில், ரயில் மும்பையின் கசாரா ரயில் நிலையம் வந்த போது, பயணிகள் கூச்சலிடத்தொடங்கியுள்ளனர்.  இதனையடுத்து அங்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், 2 கொள்ளையர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் 6 பேர் தப்பிச்சென்றனர். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் தப்பியோடிய கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், மேலும் இரண்டு கொள்ளையர்களைக் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய எஞ்சிய 4 கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஓடும் ரயிலில் பயணிகளிடம் கொள்ளை, பெண் பயணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;