india

img

பாஜகவுக்கு சவாலாகிவிட்ட உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தல்.... தீவிரம் காட்டும் எதிர்க்கட்சிகள்....

லக்னோ:
உத்தரப் பிரதேச பஞ்சாயத்து தேர்தல் அங்கு ஆளும் பாஜகவுக்குசவாலாகிவிட்டது. இத்தேர்தல் உ.பி.யில் வரும் 2022 இல் வரவிருக்கும்சட்டப்பேரவைத் தேர்தலின் முன் னோட்டமாகக் கருதப்படுவதால் அதன்மீது எதிர்க்கட்சிகள் அதிகத் தீவிரம் காட்டுகின்றன.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் பஞ்சாயத்து தேர்தல்அதன் சட்டப்பேரவைக்கு முன் னோட்டமாக உள்ளது. இதன் முடிவுகளின் தாக்கம் அடுத்த சில வருடங்களில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதிபலிக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.இதனால், நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான உபியில் நடைபெறும் பஞ்சாயத்துத் தேர்தலில் அம்மாநில அரசியல் கட்சிகள்இப்போதிருந்தே தீவிரம் காட்டத்தொடங்கிவிட்டன. இங்கு முதன்முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆளும் பாஜகவுக்கு, பஞ்சாயத்து தேர்தல், பெரும் சவாலாகி விட்டது.இத்தேர்தலில் பாஜக, உபி கிராமங்களில் தனது செல்வாக்கை மேலும் உயர்த்த முயற்சிக்கிறது. இதற்காக, கிராமங்களின் ஒவ்வொருவாக்குச்சாவடியிலும் தனது மாவட்ட அளவிலான மூத்த தலைவர்களை ஏஜெண்ட்டுகளாக பாஜக அமர்த்தி உள்ளது.

ஏனெனில், உபியின் நகர்ப்புறக்கட்சியாகவே பாஜகக் கருதப்படுகிறது. கிராமப்புறங்களில் தனது எதிர்க்கட்சிகளான பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்டோரின் செல் வாக்கை வீழ்த்த வேண்டி உள்ளது.கடந்த 2014, 2017 மற்றும் 2019என தொடர்ந்து நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் களில் எதிர்கட்சிகளுக்கு ஏற்பட்ட தோல்வியை பாஜக தனக்குச் சாதகமாகக் கருதுகிறது. தில்லியில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டமும் பாஜகவை பயமுறுத்துகிறது.போராட்டக் களத்திலுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி.,யில் உள்ள விவசாயிகள் பாஜகவிற்கு எதிராக மகாபஞ்சாயத்துக்களை நடத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.உ.பி.யின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கடந்த ஒரு மாதகாலமாக மாநிலம் முழுவதிலும் தனது சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். இதில்,இதுவரை இல்லாத வகையில் சுமார் நாற்பதிற்கும் மேற்பட்டக் கூட் டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இப்பிரச்சாரத்தில் பல்வேறு பகுதிகளில் இரவிலும் அகிலேஷ் தங்கி பொதுமக்களின் செல்வாக்கைப் பெறும் முயற்சியில் உள்ளார். இவற்றில் இந்துக்களின் கோயில்கள்,முஸ்லிம்களின் தர்காக்கள் மற்றும்புத்த சமயத்தினரின் புனிதத்தலங்கள் என அனைத்திலும் தவறாமல் வழிபாடுகளையும் நடத்துகிறார்.இக்கூட்டங்களின் மூலம் 2022 சட்டப்பேரவை தேர்தலையும் குறிவைத்துள்ள அகிலேஷ், ஆங்காங்கே சைக்கிள் யாத்திரைகளும் நடத்தி வருகிறார்.

மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜின் தலைவரான மாயாவதியும் தனது நேரடி கவனத்தை பஞ்சாயத்து தேர்தலில் செலுத்தி வருகிறார். தனது முன்னாள் எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் தலைமையில் கிராமந்தோறும் குழுக்களைஅமைத்துள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தன் முக்கிய எதிரியான சமாஜ்வாதியுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்தது.உ.பி.யின் 80 தொகுதிகளில் மாயாவதி 38, அகிலேஷ் 37 எனப் போட்டியிட்டனர். இதில் மாயாவதிக்கு சமாஜ்வாதியை விட அதிகமான வாக்குகளுடன், இருமடங்கு தொகுதிகளாகப் பத்து தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.இதனால், இந்தமுறை உ.பி., பஞ்சாயத்து தேர்தலில் தீவிரம் காட்டி 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்ல மாயாவதி முனைப்பு காட்டுகிறார். உ.பி.,யில் தனது சரிவு நிலையை சமாளிக்க காங்கிரஸ் பிரியங்காவை கடந்த 2019 மக்களவை தேர்தலில் இறக்கியது.

இம்மாநிலத்தின் கட்சிப் பொறுப் பாளரான பிரியங்கா, பஞ்சாயத்து தேர்தலில் தீவிரம் காட்டுகிறார். இதற்காகப், போராடும் விவசாயிகள் நடத்தி வரும் மகாபஞ்சாயத்து கூட்டங்களிலும் அவர் தவறாமல் கலந்து கொள்கிறார்.ஏப்ரல் 15 முதல் நான்கு கட்டங்களாக நடைபெறவிருக்கும் உ.பி., பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் மே 2 இல் வெளியாகின்றன.

நன்றி: ஷபி முன்னா, தி இந்து
 

;