வெளிநாடுகளில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வெளிநாட்டில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ராணுவ பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்வதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ட்ரோன்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.