2023-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் 28,811 புகார்கள் பதிவாகியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 55% புகாா்களுடன் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது.
குடும்ப வன்முறைகள் தவிா்த்து, பெண்களுக்கு எதிரான பிற குற்றங்கள் தொடா்பான புகாா்களில் கண்ணியக் குறைவு புகாா்கள் (8,540) முதலிடத்தில் உள்ளது.
இதற்கு அடுத்ததாக 6,274 புகாா்களுடன் குடும்ப வன்முறை புகாா் உள்ளது.
வரதட்சணை புகாா்கள் (4,797), பாலியல் ரீதியில் துன்புறுத்தல் (2,349), புகாா்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது (1,618), பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் முயற்சிகள் (1,537) தொடா்பான புகாா்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பெண்களுக்கு எதிரான இணைய குற்றங்கள் தொடா்பாக 605 புகாா்களும், பெண்களை பின்தொடா்தல் தொடா்பாக 472 புகாா்களும், கெளரவ கொலை உள்ளிட்ட குற்றங்கள் தொடா்பாக 409 புகாா்களும் பதிவாகியுள்ளன.
இதில் 16,109 புகாா்கள் பதிவுடன் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தலைநகா் தில்லி 2,411 புகாா்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரம் (1,343 புகாா்கள்) மூன்றாமிடம் வகிக்கிறது.
பிகாா் (1,312), மத்திய பிரதேசம் (1,165), ஹரியாணா (1,115),ராஜஸ்தான் (1,011), தமிழகம் (608), மேற்கு வங்கம் (569), கா்நாடகம் (501) ஆகிய மாநிலங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.