இந்தியத் தூதரக அதிகாரியைக் கனடா வெளியேற்றியதற்குப் பதிலடியாக கனடா தூதரக அதிகாரியை இந்தியா வெளியேற்றியது.
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்தியாவிற்குப் பங்கு உள்ளதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
குற்றம் சாட்டப்பட்ட சில மணிநேரங்களிலேயே இந்தியாவின் தூதரக அதிகாரி கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
கனடாவின் இந்த செயலால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவுக்கான கனடாவின் தூதருக்கு சம்மன் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து கனடாவின் தூதரக அதிகாரி இன்னும் ஐந்து நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது.